இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மண்ணடியில் பயங்கரம் - கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை; மனைவி, கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை

8/16/2016 3:33:44 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!


தண்டையார்பேட்டை, -சென்னை மண்ணடியில் வாயில் துணியை அமுக்கி, கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்ததா என கள்ளக்காதலி மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டின் 3வது மாடியில் வசித்து வந்தவர் அக்பர் (49). தொழிலதிபரான இவர், மண்ணடி பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாத்திமுத்து (35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம்.நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு வந்தார் அக்பர். குடும்பத்தினருடன் சாப்பிட்டார். பின்னர் அனைவரும் படுக்கைக்கு சென்றனர். பாத்திமுத்து மற்றும் அவரது பிள்ளைகள் ஒரு அறையிலும் அக்பர், தனி அறையிலும் தூங்கினர். இன்று காலையில் அக்பரின் மைத்துனர் சையது என்பவர், அக்பர் வீட்டுக்கு வந்தார். கதவு தட்டும் சத்தம் கேட்டு, பாத்திமுத்து எழுந்து வந்து கதவை திறந்தார். அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே, அக்பர் தூங்கி கொண்டிருந்த அறைக்கு சையது சென்றார். அங்கு, வாயில் துணி திணிக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அக்பர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். பாத்திமுத்து மற்றும் பிள்ளைகளும் ஓடி வந்தனர். அக்பரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் போஸ், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது, மண்ணடி தெருமுனை வரை சென்று நின்றது. இதையடுத்து அக்பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இதில், அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாத்திமா (40) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் இவர்கள் நெருக்கமாக இருக்கும்போது, பாத்திமுத்து பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆத்திரத்தில் அங்கு கிடந்த ஒரு பாட்டிலை எடுத்து கணவரை சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த அக்பர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அன்று முதல் கணவரை கடுமையாக கண்டித்ததோடு அவர், மீது கடும் வெறுப்பில் இருந்தார். அதற்கு பிறகு பாத்திமாவை பார்ப்பதை அக்பர் தவிர்த்துள்ளார். ஆனாலும், பாத்திமா, அக்பரின் வீட்டின் அருகே உள்ள கடைக்கு அடிக்கடி வந்து, அக்பருடன் சண்டை போட்டுள்ளார். கடந்த வாரம்கூட கடைக்கு வந்த பாத்திமா, அங்கிருந்தவர்கள் முன்பு சண்டை போட்டுள்ளார். எனவே கள்ளக்காதல் தொடர்பாக அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பாத்திமாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும், அக்பருக்கு தொழில் போட்டி இருந்துள்ளது. அதனால் தொழில் போட்டி காரணமாக யாராவது தீர்த்து கட்டினார்களா எனவும் போலீசார் விசாரிக்கின்றனர். இது தவிர, அக்பர் ஒரு அறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார், மற்றொரு அறையில் மனைவி மற்றும் பிள்ளைகள் இருக்கின்றனர். கதவும் பூட்டப்பட்டிருந்தது. மனைவிக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே அவரது மனைவியிடமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் சில
  • நாளை மறுநாள் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை



  • பப்ஜி விளையாட்டில் கோடி கணக்கில் சுருட்டல்: ஆபாசமாக பேசி சிறுமிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய யூ டியூப்பர் மதன் எங்கே?: பொறிவைத்து தேடும் தனிப்படை



  • குழந்தை வேண்டாம் என வற்புறுத்தியதால் திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை



  • வேறு ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் ஆத்திரம் பெட்ரோல் ஊற்றி கள்ளக்காதலியை எரித்து கொன்று கள்ளக்காதலனும் தீக்குளித்து சாவு: கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கரம்



  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]