இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தலையங்கம்

அதிவேகம் ஆபத்து

8/13/2016 12:59:39 PM
அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 95,131 கோடி: சுசில்குமார் மோடி தகவல் பணமதிப்பிழப்பால் பொருளாதார மந்தநிலை ஓராண்டுக்கு நீடிக்கும்: மன்மோகன் சிங் கணிப்பு

‘தடுப்பு நடவடிக்கைகளால், சாலை விபத்து உயிரிழப்புகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது’ என்று தமிழகச் சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த அதேநேரம், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வேன் மீது ஆம்னி பஸ் மோதிய கோர விபத்து நிகழ்ந்திருக்கிறது. மொத்தம் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் சிலர் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றனர்.
சாலை விபத்துகள் நிகழ்வதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், யாரோ ஒருவரது அலட்சியம்தான் இதற்குப் பிரதானமாக இருக்க வேண்டும். பெரும்பாலும், அலட்சியம் காட்டுபவர் தப்பித்துவிட்டாலும், இறப்பவர்கள் அப்பாவிகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு குற்றமும் செய்யாதவர்களது உயிரை எடுக்கும் உரிமையை, ஓர் அலட்சியவாதி உருவாக்கிவிடுகிறார்.

கிராமங்களில் திருவிழாக்களுக்குப் பொதுமக்கள், சரக்கு வாகனங்களில் செல்வது தவறென்றாலும், இதுதான் தொடர்கிறது. கால்நடைகளை ஏற்றிவருவதில்கூட, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சரக்கு வாகனங்களில் நின்றபடியும், அடைத்தபடியும் பயணிக்க வேண்டும் என்பது சாமானியர்களின் விருப்பம் அல்ல. இருந்தாலும், பணம் மிச்சமாகுமே என்றெண்ணித் தான் சிரமமான பயணத்தை மேற்கொள்கின்றனர். மணப்பாறை அருகே நடந்த விபத்தில், உயிர்ப்பலி அதிகரிக்கக் காரணம், சரக்கு வேனில் 60 பேர் வரை பயணம் செய்ததுதான். இதுபோன்ற பயணங்களில் கரணம் தப்பினால் மரணம் என்பதுதான் நிலை.

அதிவேகமாக வந்த ஆம்னி பஸ், கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் மோதியதில், வேனில் இருந்த ஆட்கள் அந்தரத்தில் தூக்கியெறியப்பட்டிருக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்தபோதிலும், மீட்புப்பணியின் வேகத்தைத் துரிதப்படுத்த இயலவில்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 25 கி.மீ தூரம் வரை மருத்துவமனைகள் இல்லை. அப்படியே, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தாலும், முதலுதவிச் சிகிச்சை செய்யும் அளவுக்குத்தான் வசதிகள் இருக்கின்றன. நவீனக் கருவிகள் இல்லை. இதனால், அங்கிருந்து 40 கி.மீ தூரம் உள்ள திருச்சி அரசு மருத்துவமனைக்குத்தான் படுகாயமடைந்தவர்களை ஆபத்தான நிலையில் கொண்டுவர வேண்டியிருக்கிறது. இதற்குள் உயிரிழப்பு நிகழ்ந்துவிடுகிறது என்பதுதான் கொடுமை. இதுபோன்ற நிலை, தமிழகத்தில் பல இடங்களில் இருக்கிறது.

விபத்து ஏற்படுத்திய ஆம்னி பஸ் டிரைவர் மீது கொலைக்கு நிகரான வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. வாகனங்கள் அதிவேகத்தைக் குறைத்தாலே, பெரும் விபத்துகளைத் தவிர்க்க முடியும். அப்படியே விபத்து ஏற்பட்டாலும், உயிரிழப்பு மற்றும் சேதத்தைக் குறைக்க முடியும். இதை வாகனங்களை இயக்குபவர்கள் புரிந்துகொள்ளாதவரை, இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

மேலும் சில
  • இயல்பாக மலரட்டும்!



  • ‘மல்லையா’க்களை தப்பவிடலாமா?



  • வலைதளத்திலும் பொறி



  • திமிங்கிலங்களை கொன்றுவிடலாம்!



  • தகர்ந்த மருத்துவக்கல்வி கனவு



  • கண்ணீர் வற்றிய மலைவாழ் மக்கள்



  • மணமான பெண்களின் புகுந்த வீட்டு உரிமை



  • காவிரி வழக்கில் அதிர்ச்சி ‘வாதம்’



  • ரயில் பயணங்கள் இனிக்குமா?



  • அன்னப்பறவையாக இருங்கள்!



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]