இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட நெல்லை வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம் திடீர் மரணம்

7/29/2016 5:45:56 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

நெல்லை, -பார்கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நெல்லை வக்கீல் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் இன்று காலை திடீரென்று மரணம் அடைந்தார். மனஉளைச்சலால் அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. நெல்லை வக்கீல் சங்கத்துக்கு கடந்த 13 ஆண்டு காலம் தலைவராக இருந்தவர் முத்துராமலிங்கம் (63). வக்கீல்களுக்கான புதிய சட்டத்திருத்தம் ெகாண்டுவந்தபோது அதை எதிர்த்து தீவிரமாக போராடினார்.இந்நிலையில் போராட்டம் நடத்திய தமிழகத்தை சேர்ந்த 126 வக்கீல்களை இந்திய பார்கவுன்சில்  இருதினங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்தது. இதில் முத்துராமலிங்கமும் ஒருவர்.தஞ்சாவூரில் நேற்று நடந்த வக்கீல்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் இன்று அதிகாலை முத்துராமலிங்கம் நெல்லை திரும்பினார். வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவர் மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முத்துராமலிங்கத்துக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், வருண், ரமேஷ் என்ற மகன்களும் உள்ளனர். வருண் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். ரமேஷ் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து வருகிறார்.பாளை கேடிசி நகர் காமாட்சியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் முத்துராமலிங்கத்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது நண்பர்கள் மற்றும் வக்கீல்கள் அஞ்சலி செலுத்தினர். நாளை மறுநாள் அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது. பார்கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வக்கீல் முத்துராமலிங்கத்தின் திடீர் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • மதுரையில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து நாசம் 27 பயணிகள் உயிர் தப்பினர்



  • அதிரடி திட்டம் விரைவில் அமல் ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல் இலவசம் இங்கில்லீங்க.. கேரளாவுலதான்



  • ரூ.55 கோடி ரூபாய் எங்கப்பா...?’ வங்கிக்கு பூட்டுப் போடும் மூதாட்டி திருப்பூர் அருகே பரபரப்பு



  • கூடுவாஞ்சேரி அருகே அரசமரத்தில் 5 தலை நாக உருவம் சாமி ஆடிய பெண்கள்



  • அப்துல்கலாம் பெயரிலான பூங்காவை இடித்து தள்ளிய அதிகாரிகள் காரணைப் புதுச்சேரியில் பரபரப்பு



  • கூடுவாஞ்சேரியில் ரவுடிகள் அராஜகம் பொதுமக்கள் அச்சம்



  • ஒரே நாளில் விபத்துகள் ரயில் மோதி 3 பேர் பலி போலீஸ் விசாரணை



  • அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது - விஜயகாந்த் அறிக்கை



  • ஓடும் ரயிலில் துணிகரம் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு - டிப்டாப் ஆசாமிக்கு வலைவீச்சு



  • மேட்டூரில் இருந்து திறக்கப்படும் ஆடிப்பெருக்கு தண்ணீர் குறைப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]