இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காற்றாலை மின் உற்பத்தி கடும் சரிவு - காற்றாலை மின் உற்பத்தி கடும் சரிவு

7/29/2016 5:26:35 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

நெல்லை, -காற்று சீசன் காலத்தில் காற்றின் வேகம் திடீரென குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தி மூவாயிரம் மெகாவாட்டில் இருந்து 203 மெகாவாட்டாக குறைந்தது.தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 15 முதல் 16 ஆயிரம் மெகாவாட் வரை மின் நுகர்வு செய்யப்படுகிறது. பல்வேறு வழிகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டாலும் பற்றாக்குறை நீடிப்பதால் தனியாரிடம் இருந்து 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 மெகாவாட் வரை மின்சாரம் விலை கொடுத்து வாங்கப்படுகிறது.இதில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் காற்று சீசன் என்பதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகளவில் மின்தேவையை பூர்த்தி செய்கிறது. தமிழகத்தில் உள்ள சுமார் 7 ஆயிரத்து 500 காற்றாலைகள் மூலம் காற்று சீசனில் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 500 மெகாவாட்டை கடந்து மின்சாரம் உற்பத்தியாகிறது.

நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில்தான் காற்றாலைகள் அதிகளவில் நிறுவப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக காற்று சீசன் சிறப்பாக இருப்பதால் காற்றாலை மின் உற்பத்தி வழக்கம் போல் அதிகளவில் நடைபெறுகிறது. இதில் உச்சகட்டமாக ஆடி மாதத்தில் காற்றாலைகள் 24 மணி நேரமும் சுழன்று அதிக மின்உற்பத்தியை தருவது வழக்கம். இதன்படி கடந்த வாரம் வரை காற்றாலை மின்உற்பத்தி அதிகபட்சமாக 2 ஆயிரத்து 500 மெகாவாட்டில் இருந்து 3 ஆயிரத்து 500 மெகாவாட் வரை நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 27ம் தேதி காற்றாலை மின்உற்பத்தி 2 ஆயிரத்து 221 மெவா என இருந்தது. இது நேற்று அதிகாலை ஆயிரத்து 90 மெகாவாட்டாக குறைந்தது. அதன்பிறகு காற்று மாயமானது. நேற்று காலை போதிய காற்று வீசவில்லை. காற்று சீசனுக்குஉரிய எந்த அறிகுறியும் இல்லாமல் வெயில் கொளுத்தியது.நேற்று காலை 8 மணி நிலவரப்படி காற்றாலை உற்பத்தி குறைந்த பட்சமாக 70 மெகாவாட்டாகவும் அதிகபட்சமாக 203 மெகாவாட்டாகவும் சரிந்தது. ஆடி காற்று சீசனில் காற்றாலைகள் சுழலாமல் நின்றது காற்றாலை உற்பத்தியாளர்களிடம் வியப்பை ஏற்படுத்தியது. திடீரென காற்றாலை உற்பத்தி குறைந்ததால் மின் தேவை அதிகரித்தது. இதனால் நேற்றைய அதிகபட்ச மின் கொள்முதல் 2 ஆயிரத்து 558 மெகாவாட்டாக உயர்ந்தது.

மேலும் சில
  • மதுரையில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து நாசம் 27 பயணிகள் உயிர் தப்பினர்



  • அதிரடி திட்டம் விரைவில் அமல் ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல் இலவசம் இங்கில்லீங்க.. கேரளாவுலதான்



  • ரூ.55 கோடி ரூபாய் எங்கப்பா...?’ வங்கிக்கு பூட்டுப் போடும் மூதாட்டி திருப்பூர் அருகே பரபரப்பு



  • கூடுவாஞ்சேரி அருகே அரசமரத்தில் 5 தலை நாக உருவம் சாமி ஆடிய பெண்கள்



  • அப்துல்கலாம் பெயரிலான பூங்காவை இடித்து தள்ளிய அதிகாரிகள் காரணைப் புதுச்சேரியில் பரபரப்பு



  • கூடுவாஞ்சேரியில் ரவுடிகள் அராஜகம் பொதுமக்கள் அச்சம்



  • ஒரே நாளில் விபத்துகள் ரயில் மோதி 3 பேர் பலி போலீஸ் விசாரணை



  • அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது - விஜயகாந்த் அறிக்கை



  • ஓடும் ரயிலில் துணிகரம் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு - டிப்டாப் ஆசாமிக்கு வலைவீச்சு



  • மேட்டூரில் இருந்து திறக்கப்படும் ஆடிப்பெருக்கு தண்ணீர் குறைப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]