இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றில் பறக்கும் முதல்வர் உத்தரவு டாஸ்மாக் ஊழியர்கள் விரக்தி

7/29/2016 5:25:14 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

உடன்குடி, -தூத்துக்குடி மாவட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டார். ஆனால், அவரது உத்தரவை காற்றில் பறக்கவிடுவது போல், இன்றுவரை ஏராளமானோருக்கு வேலை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி மீண்டும் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா, டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைத்ததோடு முதற்கட்டமாக 500 கடைகள் மூட உத்தரவிட்டார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 30 கடைகள் மூடப்பட்டன.

மூடப்பட்ட கடைகளில் பணியாற்றியோர் தங்களுக்கு மாற்றுத் துறையில் பணி வழங்கப்படும் என எதிர்பார்த்தனர். இதற்கான சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டபோதும் இதில் குளறுபடிகள் உள்ளதாக புகார் எழுந்தது. பெரும்பாலானோருக்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளில் பணி வழங்கப்பட்டுள்ளது.
இதில் சில மேற்பார்வையாளர்கள் பறக்கும்படை ஆய்வுக்குழுவிலும், விற்பனையாளர்கள் சிலர் அலுவலகப் பணியிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 6 ஊழியர்கள் மட்டும் காத்திருப்போர் பட்டியிலில் உள்ளனர்.

இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான டாஸ்மாக் ஊழியர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களது கோரிக்கையை பரிசீலித்த முதல்வர், மீண்டும் பணி வழங்குமாறு நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பல்வேறு மாவட்டங்களில் பலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் முதல்வர் உத்தரவை காற்றில் பறக்கும் விடும் வகையில் இன்னும் ஒரு சில ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.எனவே, எஞ்சியுள்ளவர்களையும் உடனடியாகப் பணியில் அமர்த்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் சில
  • மதுரையில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து நாசம் 27 பயணிகள் உயிர் தப்பினர்



  • அதிரடி திட்டம் விரைவில் அமல் ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல் இலவசம் இங்கில்லீங்க.. கேரளாவுலதான்



  • ரூ.55 கோடி ரூபாய் எங்கப்பா...?’ வங்கிக்கு பூட்டுப் போடும் மூதாட்டி திருப்பூர் அருகே பரபரப்பு



  • கூடுவாஞ்சேரி அருகே அரசமரத்தில் 5 தலை நாக உருவம் சாமி ஆடிய பெண்கள்



  • அப்துல்கலாம் பெயரிலான பூங்காவை இடித்து தள்ளிய அதிகாரிகள் காரணைப் புதுச்சேரியில் பரபரப்பு



  • கூடுவாஞ்சேரியில் ரவுடிகள் அராஜகம் பொதுமக்கள் அச்சம்



  • ஒரே நாளில் விபத்துகள் ரயில் மோதி 3 பேர் பலி போலீஸ் விசாரணை



  • அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது - விஜயகாந்த் அறிக்கை



  • ஓடும் ரயிலில் துணிகரம் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு - டிப்டாப் ஆசாமிக்கு வலைவீச்சு



  • மேட்டூரில் இருந்து திறக்கப்படும் ஆடிப்பெருக்கு தண்ணீர் குறைப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]