மேட்டுப்பாளையம் அருகே10ம் வகுப்பு மாணவி கழுத்து நெரித்து கொலை - அண்ணன் கைது
7/29/2016 5:05:14 PM
கோவை, -மேட்டுப்பாளையம் அருகே செல்போனில் ஆபாச படம் பார்த்ததை கண்டித்த 10ம் வகுப்பு மாணவியை அவரது அண்ணன் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்திபாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் பத்ரசாமி. இவரது மகள் ஜெய்(16). அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் பள்ளி சென்ற அவரை காணவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், மோத்திபாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள தோட்டத்தில் நிர்வாணமாக சிறுமி ஒருவர் பிணம் கிடப்பதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தது காணாமல் போன ஜெய் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி மகன் தினேஷ்(22) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர் ஜெயக்கு அண்ணன் முறை ஆவார். கடந்த வாரம் தினேஷ் தனது செல்போனில் ஆபாசபடம் பார்த்து கொண்டிருந்தார். இதை கவனித்த ஜெய தினேஷை கண்டித்ததுடன் பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ், ஜெயகழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அடையாளம் தெரியாமல் இருக்க சீருடையை கழற்றி தூக்கி வீசி எறிந்துள்ளார். மேலும் சிறுமியை நிர்வாணமாக அங்குள்ள தோட்டத்தில் மறைவான இடத்தில் வீசி சென்றது தெரியவந்தது. போலீசார் தினேஷை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.