இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நாக்பூரில் ஓய்வெடுக்க கெஜ்ரிவால் திட்டம்

7/29/2016 4:39:59 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

புதுடெல்லி, - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இயற்கை மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பாரம்பரிய மருத்துவத்தை நாடுவது வழக்கம். தற்போது, டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, மாநில அரசை மதிப்பதில்லை. மேலும், பல்வேறு வழக்குகளில் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் 12 பேர் வரிசையாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கெஜ்ரிவால் பிரதமர் மோடி மீது கடுமையாக தாக்கிப் பேசினார். அரசியல் பிரஷர் எகிறிய நிலையில், சில நாள்கள் ஓய்வெடுக்க கெஜ்ரிவால் திட்டமிட்டிருக்கிறார்.

    ஆகஸ்ட் மாதத்தில் 12 நாட்களுக்கு நாக்பூரில் விபாசனா என்ற பாரம்பரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள அவர் முடிவு செய்திருக்கிறார். அங்கிருக்கும் போது ஊடகங்கள் எதற்கும் அனுமதி கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். ஜூலை 30ம் தேதி புறப்படும் அவர் 12 நாட்களுக்கு நாக்பூரில் மருத்துவ ஓய்வில் இருப்பார் என்று துணை முதல்வர் சிசோடியாவும் அறிவித்துள்ளார். கெஜ்ரிவால் விடுப்பின் போது டெல்லி அரசு நிர்வாகத்தை துணை முதல்வர் சிசோடியாக கவனிப்பார்.

ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கெஜ்ரிவால் இதே போன்று மருத்துவ விடுப்பில் சென்றார். அதே போல் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் 10 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றார். 10 மாதங்களுக்கு முன்பு கடுமையான இருமலால் அவதிப்பட்ட கெஜ்ரிவால் பெங்களூருவில் உள்ள மருத்துவ மையத்தில் தங்கியிருந்து இயற்கை மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து



  • 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்



  • 10வது நாளாக விமானம் தேடுதல் பணி: விசாகப்பட்டினம் வனப்பகுதியில் ஆய்வு



  • ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் வலிமையை வீரர்கள் உலகத்திற்கு காட்டுவர்: மராத்தானை தொடங்கி வைத்து மோடி பேச்சு



  • புற்று நோய், நீரிழிவு, இதய நோயை கண்டறிய வீடு வீடாக மருத்துவ பரிசோதனை: மத்திய அரசு புதிய திட்டம்



  • கர்நாடகாவில் இன்று முழுஅடைப்பு தமிழக பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்



  • பாலாறு நீர்வரத்தை ஆந்திர அரசு தடுத்ததால் தடுப்பணையில் குதித்த விவசாயி சடலம் மீட்பு



  • வட மாநிலங்களில் கனமழை, வெள்ளம் - அசாமில் ராஜ்நாத்சிங் நேரில் ஆய்வு



  • வங்கதேச தீவிரவாதிகள் 5 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவல்



  • ராஜ்யசபாவில் அடுத்த வாரம் ஜிஎஸ்டி மசோதா விவாதம்



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]