பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களுக்கு டீசி
7/29/2016 3:43:37 PM
வேலூர், -ஆம்பூர் அரசு நிதியுதவி பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களுக்கு டீசி வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் அரசு நிதியுதவி இந்து மேல்நிலைப்பள்ளியில் இறைவழிபாடு நேற்று முன்தினம் காலை நடந்தது. அப்போது 4 மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்தனர். அங்கிருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவர்களை விசாரித்த போது வாந்தி எடுத்த மாணவர்களில் ஒருவனுக்கு பிறந்தநாள் என்பதால், இறைவழிபாட்டிற்கு வரும் முன்பே குளிர்பானத்தில் மது கலந்து குடித்தது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கடுமையாக எச்சரித்தார்.
இதற்கிடையில் பள்ளியில் மாணவர்களை கண்காணிக்காத தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி அலுவலர் பிரியதர்ஷினி நோட்டீஸ் வழங்கினார். மேலும் ஆசிரியர்களிடம் இதுதொடர்பான அறிக்கையை முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மது அருந்திய 4 மாணவர்களை பள்ளியில் இருந்து டீசி வழங்கி தற்காலிகமாக நீக்கும்படி தலைமை ஆசிரியருக்கு நேற்று உத்தரவிட்டார்.