இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பண பரிவர்த்தனைகள் பாதிப்பு - நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் : ₹19 ஆயிரம் கோடி காசோலைகள் முடக்கம்

7/29/2016 3:10:26 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

சென்னை, - பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.19 ஆயிரம் கோடி காசோலை பணபரிவர்த்தனை முடங்கி உள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், வங்கிகள் சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகள் மீது திணிக்கும் கொள்கைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர். டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையொட்டி இன்று திட்டமிட்டப்படி ஸ்டிரைக் நடந்தது. இதில் 43 வணிக வங்கிகள், 50 கிராமிய  வங்கிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் பணியாற்றும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். அதிகாரிகளும் பங்கேற்றதால் பெரும்பாலான வங்கிகள் முடங்கின.

 இதற்கிடையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்பட 9 சங்கங்கள் கலந்து கொண்டுள்ளதால் போராட்டம் முழு வெற்றி அடைந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த போராட்டத்தால் வங்கிகளில் பணம் போடுவது, பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளை பெற முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காசோலை பரிமாற்றம் இல்லாததால் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது:போராட்டத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள் உள்பட 80 ஆயிரம் கிளைகளில் இருந்து 10 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க  மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அப்படி நடந்தால் விவசாய கடன், கல்வி கடன் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்படும். தனியார் நிறுவனங்கள் லாபம் நோக்கில் மட்டுமே செயல்படுவார்கள்.இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே தான் பொதுமக்களின் நலன் கருதி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில், ரூ.78 ஆயிரம் கோடி கடன் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்கள் யார், எத்தனை ஆண்டுகளாக அவர்கள் வங்கிகளுக்கு பணத்தை திருப்பி செலுத்தாமல் உள்ளனர் என்ற விவரங்களை வெளியிட வேண்டும்.இன்று நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தால் சென்னையில் மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புள்ள 8 லட்சம் காசோலைகள், நாடு முழுவதும் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.26 லட்சம் காசோலைகள் முடங்கி உள்ளன. எங்களது கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்தால் அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து



  • 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்



  • 10வது நாளாக விமானம் தேடுதல் பணி: விசாகப்பட்டினம் வனப்பகுதியில் ஆய்வு



  • ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் வலிமையை வீரர்கள் உலகத்திற்கு காட்டுவர்: மராத்தானை தொடங்கி வைத்து மோடி பேச்சு



  • புற்று நோய், நீரிழிவு, இதய நோயை கண்டறிய வீடு வீடாக மருத்துவ பரிசோதனை: மத்திய அரசு புதிய திட்டம்



  • கர்நாடகாவில் இன்று முழுஅடைப்பு தமிழக பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்



  • பாலாறு நீர்வரத்தை ஆந்திர அரசு தடுத்ததால் தடுப்பணையில் குதித்த விவசாயி சடலம் மீட்பு



  • வட மாநிலங்களில் கனமழை, வெள்ளம் - அசாமில் ராஜ்நாத்சிங் நேரில் ஆய்வு



  • வங்கதேச தீவிரவாதிகள் 5 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவல்



  • ராஜ்யசபாவில் அடுத்த வாரம் ஜிஎஸ்டி மசோதா விவாதம்



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]