சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதையில் கண்டன கருத்தரங்கம்
7/28/2016 5:38:05 PM
சென்னை, -சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ‘அலங்கோல அரசுகள்’ எனும் தலைப்பில் சைதாப்பேட்டை, தேரடி திடலில் நேற்று மாலை மாபெரும் கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ‘செத்த மொழிக்கு ஏன் சிங்காரிப்பு?’ எனும் தலைப்பில் பழ.கருப்பையா, ‘நிதியும் இல்லை.. நிலையும் இல்லை’ எனும் தலைப்பில் சுப.வீரபாண்டியன், ‘சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு’ எனும் தலைப்பில் கம்பம் செல்வேந்திரன் மற்றும் சைதை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் எஸ்.குணசேகரன், பாலவாக்கம் விஸ்வநாதன், துரைகபிலன், வாசுகி பாண்டியன், எம்எஸ்கே.இப்ராகிம், எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன், மாநில இளைஞரணி துணை செயலாளரும் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினருமான தாயகம் கவி, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.மகேஷ்குமார், மாநில வர்த்தக அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம், கழக சட்ட-திட்ட திருத்தக்குழு செயலாளர் பாலவாக்கம் சோமு, மாநில கலை இலக்கிய பேரவை செயலாளர் பொள்ளாச்சி உமாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.