இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

நெல்லையில் நள்ளிரவில் பரபரப்பு - வியாபாரிகள் சங்க நிர்வாகியை தாக்கி ₹3 லட்சம் வழிப்பறி : பைக்கையும் பறித்து கொள்ளையர்கள் ஓட்டம்

7/28/2016 5:08:20 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

நெல்லை, -நெல்லையில் நேற்று நள்ளிரவில் வியாபாரி சங்க நிர்வாகியை தாக்கி மர்ம நபர்கள் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். பைக்கையும் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.நெல்லை டவுன் தெற்கு மவுன்ட் ரோட்டை சேர்ந்தவர் குணசேகரன்(55). இவர் நெல்லை வாகையடிமுனையில் சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். நெல்லை மாநகர வியாபாரிகள் சங்க பொருளாளராக உள்ளார். இவர் தினமும் இரவு 11 மணியளவில் வியாபார கணக்குகளை முடித்து விட்டு கடையை மூடிவிட்டு பைக்கில் வீடு திரும்புவார். நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து இரவு 11.30 மணிக்கு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் உள்ள பெட்டியில் ரூ.3 லட்சம் பணம் வைத்திருந்தார். சந்திபிள்ளையார் ேகாயில் வழியாக தெற்கு மவுன்ட்ரோடு சாலையில் செல்லும்போது 2 பேர் அவரை வழிமறித்தனர்.

இதனையடுத்து குணசேகரன் பைக்கை நிறுத்தினார். அப்போது திடீரென அந்த நபர்கள் அவரை கம்பால் தாக்கி பைக்கிலிருந்து கீழே தள்ளினார்கள். இதனை சற்றும் எதிர்பாராத குணசேகரன் சுதாரித்துக்கொள்வதற்குள் அந்த நபர்கள் அவரை பைக்கை பறித்து கொண்டு தப்பினர். குணசேகரன் கூச்சலிட்டபடி சற்று தூரம் விரட்டி சென்றார். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் மாயமாகிவிட்டனர்.இரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. உடனே குணசேகரன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மாநகர குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். குணசேகரன் கடையில் லட்சக்கணக்கில் மொத்த வியாபாரம் நடக்கும். தினமும் மதியம் வரை நடக்கும் பணத்தை வங்கியில் செலுத்திவிடுவார். மாலையில் இருந்து இரவு வரை நடக்கும் பணத்தை வங்கியில் செலுத்த முடியாததால், இரவு வீட்டிற்கு எடுத்து செல்வார். அந்த பணத்தை மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவார். இதுபோல் நேற்று இரவு எடுத்து செல்லப்பட்ட பணம் ரூ.3 லட்சத்தையும் அவர் எடுத்து செல்லும்போது தான் மர்ம நபர்கள் அவரை மறித்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் பைக்கையும் துணிச்சலுடன் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் சில
  • மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை கொன்ற கணவன் - கும்பகோணம் அருகே பரபரப்பு



  • வீடு உடைத்து நகை கொள்ளை



  • வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவர் கைது



  • மதுரவாயல் பைபாஸ் சாலையில் வழிப்பறி செய்த 5 பேர் கைது



  • ஆசிரியையிடம் 8 பவுன் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை



  • ₹2 ேகாடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்



  • வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவியை கொன்ற ராணுவ வீரர் கைது



  • உடுமலை சங்கர் கொலை வழக்கு சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை



  • நர்சுக்கு பளார்; டாக்டர் கைது



  • மாதவரம் விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]