இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஊட்டி அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை ெசய்த மூதாட்டிக்கு பார்வை இழப்பு

7/28/2016 5:07:53 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

ஊட்டி, -நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள இளித்தொரை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள். இவரது தாயார் சுப்பியம்மாள்(80). இவரது கண்பார்வை குறைந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி ஊட்டி தலைமை அரசு மருத்துவமனையில் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ெசய்தார். ஆபரேஷனுக்கு பின் அந்த கண்ணில் பார்வை தெளிவானது. இடது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்படவே, மீண்டும் ஊட்டி அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி அறுவை சிகிச்சை செய்துள்ளார். அப்போது அவரது கண்ணில் ரத்தம் கசிந்துள்ளது. குடும்பத்தினர் கேட்டபோது, ரத்தக்கசிவு சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், சுப்பியம்மாளுக்கு கண்ணில் வலி அதிகரித்துள்ளது. மேலும், நீர் கசிந்துக் கொண்டே இருந்துள்ளது.

இதையடுத்து பல முறை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போதெல்லாம், கண் அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாத நிலையில், நர்சுகளே சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், கண் தெரிவதில்லை எனக் கூறிய போது, சரியாகிவிடும் என ஒவ்வொரு முறையும் கூறியுள்ளனர். ஆனால், சுப்பியம்மாளுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கண்ணில் அதிக வலி ஏற்பட்டதால், தனியார் கண் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அவர்கள், சுப்பியம்மாளின் பார்வை போய்விட்டது. தவறான சிகிச்சையால் கண்ணில் காயமும் ஏற்பட்டுள்ளது, என்று கூறியுள்ளனர். எனினும்,வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சுப்பியம்மாளை காண்பித்தபோது, காயம் அடைந்த கண்ணில் வலியை போக்க மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், திரும்ப பார்வை கிடைக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.இதனால், அதிர்ச்சியடைந்த சுப்பியம்மாள் குடும்பத்தினர். மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். அதில், சுப்பியம்மாள் பார்வை இழப்பிற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் சில
  • மதுரையில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து நாசம் 27 பயணிகள் உயிர் தப்பினர்



  • அதிரடி திட்டம் விரைவில் அமல் ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல் இலவசம் இங்கில்லீங்க.. கேரளாவுலதான்



  • ரூ.55 கோடி ரூபாய் எங்கப்பா...?’ வங்கிக்கு பூட்டுப் போடும் மூதாட்டி திருப்பூர் அருகே பரபரப்பு



  • கூடுவாஞ்சேரி அருகே அரசமரத்தில் 5 தலை நாக உருவம் சாமி ஆடிய பெண்கள்



  • அப்துல்கலாம் பெயரிலான பூங்காவை இடித்து தள்ளிய அதிகாரிகள் காரணைப் புதுச்சேரியில் பரபரப்பு



  • கூடுவாஞ்சேரியில் ரவுடிகள் அராஜகம் பொதுமக்கள் அச்சம்



  • ஒரே நாளில் விபத்துகள் ரயில் மோதி 3 பேர் பலி போலீஸ் விசாரணை



  • அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது - விஜயகாந்த் அறிக்கை



  • ஓடும் ரயிலில் துணிகரம் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு - டிப்டாப் ஆசாமிக்கு வலைவீச்சு



  • மேட்டூரில் இருந்து திறக்கப்படும் ஆடிப்பெருக்கு தண்ணீர் குறைப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]