கும்மிடிப்பூண்டியில் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
7/9/2025 1:44:08 PM
கும்மிடிப்பூண்டி, -கும்மிடிப்பூண்டி தபால் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது பேத்திக்கு புதுகும்மிடிப்பூண்டி எல்லையம்மன் கோயிலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காது குத்து விழா நடந்தது. இதில் பங்கேற்ற பெண்களை அதே பகுதியை சேர்ந்த செங்கன், ரமேஷ் உள்பட 3 பேர் கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட 3 பேரையும் தாக்கியுள்ளனர். வக்கீல் வேலு என்பவரது மண்டை உடைந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த செங்கன் (37), ரமேஷ் (39), சிலம்பரசன்(23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் தாமதமாக நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் டில்லிபாபுவை கண்டித்து கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் கும்மிடிப்பூண்டி வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.