இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பைக்குகள் மோதல் விவகாரத்தில் கான்டிராக்டர் முகத்தில் குத்திய இன்ஸ்பெக்டர்; போலீசில் புகார்

7/9/2025 1:40:58 PM
இணை அமைச்சர்களுக்கு பணி ஒதுக்கும் விவகாரத்தில் மோடி தலையிட முடிவு கேரளாவில் இருந்து மேலும் 4 பேர் சிரியா பயணம் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் சிக்கினார்: மும்பையில் ரகசிய இடத்தில் விசாரணை

திருவொற்றியூர், -சென்னை மணலி, புதுநகர், வடிவுடையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (40). கட்டிட கான்டிராக்டர். இவர் நேற்றிரவு மணலி புதுநகர் சாலை வழியாக வீட்டுக்கு பைக்கில் சென்றார். அப்போது எதிரே யுவராஜ் என்பவர் பைக்கில் வேகமாக வந்து, விஜயகுமாரின் பைக் மீது மோதியுள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்து அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் இருவரும் புகார் செய்தனர்.  போலீசார் இருவரிடமும் விசாரித்து கொண்டிருக்கும்போது, அவ்வழியாக ஜீப்பில் மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வந்தார். அவர் வாக்குவாதம் நடந்த இடத்துக்கு சென்று கான்டிராக்டர் விஜயகுமாரிடம் ‘மது குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறாயா?’ என்று கேட்டிருக்கிறார். ‘எனக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை. என் பைக் மீது யுவராஜ்தான் வேகமாக மோதினார்’ என்று விஜயகுமார் கூறியுள்ளார்.

‘என்னிடமே எதிர்த்து பேசுகிறாய்?’ என்று கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர் சரவணன், கான்டிராக்டர் விஜயகுமாரின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். விஜயகுமாரின் கண்ணில் அடிபட்டு சிவந்ததுடன் முகமும் வீங்கியது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சரவணன் அங்கிருந்து சென்றுவிட்டார். திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகுமார் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்ஸ்பெக்டர் சரவணனின் அடாவடி செயல் குறித்தும் அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எண்ணூர் உதவி ஆணையரிடம் விஜயகுமாரும் அவரது குடும்பத்தினரும் புகார் அளித்தனர். இதுபற்றி எண்ணூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரித்து வருகிறார்.

மேலும் சில
  • மீனவர்கள், படகுகளை மீட்க வலியுறுத்தி புதுக்கோட்டை மீனவர்கள் ஸ்டிரைக்: ராமேஸ்வரத்திலும் வேலை நிறுத்தம்



  • மெரினாவில் மூழ்கி டெல்லி, ராஜஸ்தான் வாலிபர்கள் பலி



  • காமராஜர் பிறந்த நாள் விழா வடசென்னையில் மலர் அஞ்சலி : ராயபுரம் ஆர்.மனோ அறிக்கை



  • தென்சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் திமுகவில் சேர்ந்தார்



  • வங்கிகள் நாளை ஸ்டிரைக்: பண பரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் பாதிக்கும்



  • அதிமுக எம்பி 3வது திருமணம், மும்பை பெண்ணை மணந்தார்



  • போதை மீட்பு பிரிவு ஜி.ஹெச்.சில் துவக்க கோரிக்கை



  • சாய்ராம் கல்வி குழும நிறுவனர் லியோ முத்து நினைவேந்தல் நிகழ்ச்சி



  • நாபலூர் கோயில் கும்பாபிஷேகம்



  • திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் ‘புகை’: மக்கள் திணறல்



Facebook

Twitter

விஜய் சேதுபதி படம் இயக்குனர் நழுவல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]