ஊத்துக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து 40 பெண்கள் காயம்
7/9/2025 1:39:47 PM
ஊத்துக்கோட்டை, -ஊத்துக்கோட்டை அருகே தேவந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த 40 பெண்கள் இன்று காலை 10 மணியளவில் சரக்கு வேனில் கூலி வேலைக்காக சீத்தஞ்சேரி வழியாக கூனிப்பாளையத்துக்கு சென்றனர். அம்மம்பாக்கத்தில் உள்ள ஏரிக்கரை வளைவில் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த பெண்கள் காயம் அடைந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து, 40 பேரையும் மீட்டு கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 18 பேரை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பென்னாலூர் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.