இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

24 மத்திய அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் - 72 பேர் கோடீஸ்வரர்கள்

7/9/2025 1:00:38 PM
இணை அமைச்சர்களுக்கு பணி ஒதுக்கும் விவகாரத்தில் மோடி தலையிட முடிவு கேரளாவில் இருந்து மேலும் 4 பேர் சிரியா பயணம் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் சிக்கினார்: மும்பையில் ரகசிய இடத்தில் விசாரணை

புதுடெல்லி, -மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் 31 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கோடீஸ்வர அமைச்சர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த சூழலில் அமைச்சரவையின் பலம் 78 ஆக உயர்ந்துள்ளது. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எம்பிக்களின் சொத்து மற்றும் வழக்குகள் குறித்து அண்மையில் அவர்கள் லோக்சபா மற்றும் ராஜ்யசபா தேர்தல்களில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதையொட்டி ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தமுள்ள 78 அமைச்சர்களில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிலும் குறிப்பாக 18 சதவீதம் பேர் மீது அதாவது 14 பேர் மீது கொலை, வகுப்பு கலவரத்தை தூண்டி விடுதல், தேர்தல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன.

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 92 சதவீதம் அதாவது 72 பேர் கோடீஸ்வர அமைச்சர்கள். அண்மையில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றவர்களின் சராசரி சொத்து மதிப்பு மட்டும் ரூ.8.73 கோடி. ஒட்டு மொத்தமாக ஒரு அமைச்சரின் சொத்து மதிப்பு ரூ.12.94 கோடி.மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு அண்மையில் அமைச்சரான எம்.ஜே. அக்பரின் சொத்து மதிப்பு ரூ.44.90 கோடி. இவருக்கு அடுத்த படியாக பி.பி.சவுத்ரியின் சொத்து மதிப்பு 35.35 கோடி, இதையடுதது ராஜஸ்தான் ராஜ்யசபா எம்பியான விஜய் கோயலின் சொத்து மதிப்பு ரூ.29.97 கோடி.
அமைச்சரவையில் அதிகபட்ச சொத்துகளை கொண்டவராக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.200 கோடிக்கும் அதிகமாகும். இவருக்கு அடுத்தபடியாக ஹர்சிம்ரத் கவுர், பியூஷ் கோயல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பெரும்பான்மையான அமைச்சர்கள் 41 முதல் 60 வயது நிரம்பியவர்கள். 3 பேர் 31 முதல் 40 வயது உடையவர்கள். 31 பேர் 61 முதல் 80 வயது கொண்டவர்கள். மொத்த அமைச்சர்களில் 12 சதவீதம் அதாவது 9 பேர் மட்டுமே பெண்கள்.புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்களில் மிகவும் குறைவான சொத்து மதிப்பு கொண்டவராக அனில் மாதவ் தவேயின் சொத்து மதிப்பு ரூ.60.97 லட்சம். 6 அமைச்சர்கள் மட்டுமே ரூ. 1 கோடிக்கும் குறைவான சொத்துகளை கொண்டவர்கள் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சில
  • மீனவர்கள், படகுகளை மீட்க வலியுறுத்தி புதுக்கோட்டை மீனவர்கள் ஸ்டிரைக்: ராமேஸ்வரத்திலும் வேலை நிறுத்தம்



  • மெரினாவில் மூழ்கி டெல்லி, ராஜஸ்தான் வாலிபர்கள் பலி



  • காமராஜர் பிறந்த நாள் விழா வடசென்னையில் மலர் அஞ்சலி : ராயபுரம் ஆர்.மனோ அறிக்கை



  • தென்சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் திமுகவில் சேர்ந்தார்



  • வங்கிகள் நாளை ஸ்டிரைக்: பண பரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் பாதிக்கும்



  • அதிமுக எம்பி 3வது திருமணம், மும்பை பெண்ணை மணந்தார்



  • போதை மீட்பு பிரிவு ஜி.ஹெச்.சில் துவக்க கோரிக்கை



  • சாய்ராம் கல்வி குழும நிறுவனர் லியோ முத்து நினைவேந்தல் நிகழ்ச்சி



  • நாபலூர் கோயில் கும்பாபிஷேகம்



  • திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் ‘புகை’: மக்கள் திணறல்



Facebook

Twitter

விஜய் சேதுபதி படம் இயக்குனர் நழுவல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]