இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

17ம் நூற்றாண்டு காசுகள், பீரங்கி குண்டுகள் ரஞ்சன்குடி கோட்டையில் கண்டெடுப்பு

6/11/2025 12:04:37 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்க்கும் சுற்றுலா தலம் ரஞ்சன்குடி கோட்டை. பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில், மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன்குடியில் இக்கோட்டை உள்ளது.சந்தாசாஹிப்-பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமதுஅலி-ஆங்கிலேய கூட்டுப்படைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால்கொண்டாபோர், ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடந்ததாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

கோட்டையைச்சுற்றி அகழிகள், விதான மண்டபம், பீரங்கி மேடை, கொடிமேடை, தண்டனை கிணறு, வெடிமருந்துக்கிடங்கு, புறவழி சுரங்கப்பாதை, பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம், முகமதியர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட மசூதிகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாதபடி துளைகள் இடப்பட்ட சுற்றுச்சுவர், குதிரை லாயம் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 152அடி உயரமுள்ள கோட்டையின் உச்சியில் அமைக்கப்பட்ட குளம் போன்றவை இன்றளவும் அழியாமல் உள்ளன.

இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோட்டையில் காவலாளியாக அவ்வூரைச் சேர்ந்த காசிம்(71) என்பவர் 37 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். கோட்டையில் ஆங்கிலேயர்கள், பிரான்ஸ்காரர்கள் மற்றும் முகமதியர்கள் ஆதிக்கத்தின்போதும் தமிழகத்தில் பயன் படுத்தப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான 50க்கும் மேற்பட்ட தாமிரக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சேகரித்த காசிம், அவ்வப்போது பெரம்பலூர் கலெக்டர்களாகப் பதவியில் இருக்கும் பலரிடம் கொடுத்து மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் சேர்த்துப் பாதுகாக்க வேண்டுமெனப் பரிந்துரைத்ததுண்டு.

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட பீரங்கிக் குண்டுகள் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெரிதும் சிறிதுமான 2 பீரங்கிக் குண்டுகளை காசிம் கண்டெடுத்தார். அதோடு, அரியவகைக் காசுகளையும் கண்டெடுத்துள்ளார். 1750ல் பிரெஞ்சு ஆதிக்கத்தின் போது ஒரே நாணயத்தில் ஒரு பக்கம் ஆங்கிலேய மன்னர்களின் இலச்சினையும், மறுபக்கம் முகமதியர்களின் உருது எழுத்தினான இலச்சினையும் அச்சிடப்பட்ட காசுகள், 1808ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியரால் அச்சிடப்பட்ட காசுகள், விஓசி எனப்படும் வாண்டிமேன் ஓவன்கோவன் பெயரிலான காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளாக இவர் சேகரித்து வரும் 50க்கும் மேற்பட்ட தாமிரக்காசுகள் கையிருப்பில் உள்ளன.

காசிம் கூறுகையில், ரஞ்சன்குடியில் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறைகளில் 4 கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. இவற்றில் 2 கட்டிடங்களை ஒதுக்கி, அதில் அருங்காட்சியகம் ஒன்றையும், நூலகம் ஒன்றையும் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு பெறப்பட்ட அரிய பொருட்கள் வேறெங்கோ முடங்கிக்கிடக்காமல், நமது சந்ததியினர் கண்டுகளிக்க பெரம்பலூரிலேயே வைத்துப் பாதுகாக்க உதவவேண்டும் என்றார்.

மேலும் சில
  • ஓசூர் சர்வேயர் கொலை வழக்கு சென்னையில் பதுங்கியுள்ள குற்றவாளி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் வாட்ஸ் அப்பில் உருக்கமான பேச்சு



  • டூவீலர்கள் மோதி விபத்து: 4 பேர் பலி



  • உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி? நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை



  • முதல்வரின் டெல்லி பயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது இளங்கோவன் குற்றச்சாட்டு



  • பொது இடத்தில் புகைப்பிடித்தல் வழக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு



  • மார்ஷல் நேசமணி பிறந்த நாள் என்.ஆர்.தனபாலன் மரியாதை



  • பிரதமர்- முதல்வர் சந்திப்பில் தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • தமிழகத்தில் பெருகி வரும் கொலை, கொள்ளைகளை தடுக்க வேண்டும் : காங்கிரஸ் மகளிர் அணி தீர்மானம்



  • சென்னையில் வாக்ஸ் குழும நிறுவனரின் நினைவு நாள் 500 குழந்தைகளுக்கு கல்வி தொகை



  • திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம்: மீனவர்கள் பீதி கடலுக்கு செல்லவில்லை



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]