இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தபால்பெட்டிக்குள் 51 பாஸ்போர்ட் சிபிஐ விசாரணை என பரபரப்பு

6/10/2025 2:20:19 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

சென்னை: சென்னை நங்கநல்லூரில் உள்ள ஒரு தபால் பெட்டியில் கடந்த 5 நாட்களில் 51 பாஸ்போர்ட்கள் கிடைத்தன. இந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரிப்பதாக இன்று காலையில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை நங்கநல்லூர் 48வது தெருவில் தபால் பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் விழும் தபால்களை சேகரிக்க தினமும் மாலையில் தபால்துறை ஊழியர் வருவார். கடந்த 2ம் தேதி மாலை தபால் ஊழியர் வந்து தபால்களை எடுத்தபோது, அதில் 23 பாஸ்போர்ட்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, அதே தபால்பெட்டியில் கடந்த 6ம் தேதி மீண்டும் 15 பாஸ்போர்ட்களும், நேற்று மாலையும் 13 பாஸ்போர்ட்களும் கிடந்தன. இதையடுத்து தபால்நிலை அதிகாரி அமிர்தலிங்கம் அளித்த புகாரில் பழவந்தாங்கல் போலீசார் அந்த 51 பாஸ்போர்ட்களை கைப்பற்றி விசாரித்து வந்தனர்.
 
பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் பலவேசன் அந்த பாஸ்போர்ட்களை, பரங்கிமலை துணை கமிஷனர் கல்யாணிடம் ஒப்படைத்தார். தற்போது, துணை கமிஷனர் கல்யாண் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 23 பாஸ்ேபார்ட்கள் யார் யாருடையது என கண்டுபிடித்தனர். அதில் ஒன்று அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சிறுமியுடையது என்பது தெரியவந்தது.முகவரியை கொண்டு நடத்தி விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள், விமான நிலையத்தில் தங்களது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் போலீசாருக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் வலுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வரும் கும்பல் போலீசாருக்கு பயந்து இதுபோன்ற தபால் பெட்டிக்குள் பாஸ்போர்ட்களை போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

மேலும், மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் போலீசார் தகவல் அளித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். பாஸ்போர்ட் அதிகாரிகளும் சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள்தான் அங்கு வந்து விசாரணை நடத்துவதாக தகவல் பரவியது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ‘‘சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்தால் மட்டுமே அவர்கள் விசாரிப்பார்கள். இந்த வழக்கில் முதல்கட்டமாக பாஸ்போர்ட்களில் உள்ள முகவரியை ஆய்வு செய்து உரிமையாளர்களிடம் விசாரித்தோம். பலரும் வெளிநாடு சென்று திரும்பும்போது விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை தவற விட்டு விட்டதாக தெரிவித்தனர். வெளிநாடுகளில் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் போலீசாருக்கு பயந்து பாஸ்போர்ட்களை தபால் பெட்டிக்குள் போட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. இருப்பினும் முழு விசாரணைக்கு பின்பே உண்மை நிலவரம் தெரிய
வரும்’’  என்றார்.

மேலும் சில
  • காவிரி, வெண்ணாற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளிய 20 மாட்டு வண்டிகள் பறிமுதல்



  • பலாத்காரம் செய்ததால் சிறுமி தற்கொலை மேஸ்திரி கைது



  • வேலை வாங்கித்தருவதாக மோசடி போலி உதவி கலெக்டர் கைது



  • கொடைக்கானல் நீர்வீழ்ச்சியில் சிறுமியுடன் செல்பி; 12 பேர் கைது



  • தந்தை அடித்துக்கொலை மகன் உட்பட 2 பேர் கைது



  • பீகாரில் மதிப்பெண் பட்டியலில் மோசடி பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது



  • தந்தையை கொலை செய்த வழக்கு காதலனுடன் மகள் சரண்



  • சென்னையில் நடந்த முடி மாற்று சிகிச்சையில் பலியான திருச்சி டாக்டரின் உடல் மறு பரிசோதனை முக்கிய உறுப்புகள் ஆய்வுக்கு செல்கின்றன



  • ராயபுரம் அடகு கடையில் கத்திமுனையில் ரூ. 50 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்தது வடமாநில வாலிபர்கள்? 3 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டை



  • மது விருந்து தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை 2 பேர் கைது



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]