இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

குதிரை பேரத்தில் சிக்கிய கர்நாடகாவில் மாநிலங்களவை தேர்தலுக்கு தடையில்லை தலைமை தேர்தல் ஆணையம் முடிவு

6/10/2025 2:15:57 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

புதுடெல்லி: குதிரை பேரத்தில் சிக்கிய கர்நாடகாவில் மாநிலங்களவை தேர்தலை தள்ளிவைக்க தலைமை தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதே சமயம் குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.கர்நாடக மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நாளை மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. சில மாநிலங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். காலியாக உள்ள இடங்களை காட்டிலும் கூடுதலாக வேட்பாளர்கள் களத்தில் உள்ள மாநிலங்களில் நாளை தேர்தல் நடக்கிறது. கர்நாடகாவில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் சார்பாக 3 பேரும், எதிர்கட்சிகளான பாஜ மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக தலா ஒருவரும் நிறுத்தப்பட்டுள்ளனர். பாஜ வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

காங்கிரசுக்கு இரண்டு இடங்கள் கிடைப்பது உறுதியாகிவிட்டது. எஞ்சிய ஒரு இடத்துக்கு மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் கடுமையாக மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 14 சுயேட்சகைள் உள்ளனர். இவர்களது ஆதரவை பெறுவதில் குதிரை பேரம் நடப்பதாக அண்மையில் சிடி ஆதாரங்கள் வெளியாயின. சுயேட்சை எம்எல்ஏக்களுடன் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேரம் பேசுவது போன்ற காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. சில சுயேட்சை எம்எல்ஏக்கள் வாக்களிக்க ரூ. 7 கோடிவரை கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து இங்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் இந்த மாநிலத்தில் நாளை தேர்தல் நடக்குமா என்ற வினா எழுந்தது. இந்நிலையில் இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்திய தலைமை தேர்தல் ஆணையம், தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியம் இல்லை என கருத்து தெரிவித்துள்ளது. இதனால் நாளை திட்டமிட்ட படி இங்கு தேர்தல் நடக்கிறது. அதே சமயம இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐயில் புகார் அளிக்கப்படும் எனவும் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் சில
  • போர்கப்பலில் விஷவாயு கசிந்து இரண்டு வீரர்கள் பலி: கர்நாடகாவில் பரபரப்பு



  • காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாக். ரூ. 200 கோடி நிதி உதவி



  • தெலங்கானாவில் 99 சதவீதம் பேர் அசைவ உணவு பிரியர்கள் ஆய்வில் தகவல்



  • அரியானாவில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய தடை பாஜ அரசு அதிரடி



  • வருகிற 21ம் தேதியன்று யோகா தின நிகழ்ச்சியில் 30 ஆயிரம் ராணுவத்தினர் பங்கேற்பு



  • மத்திய அரசு, கவர்னர் மீது ஜனாதிபதியிடம் கெஜ்ரிவால் புகார்



  • மதிய உணவு சாப்பிட்ட 50 போலீசாருக்கு வாந்தி, மயக்கம் குஜராத்தில் பரபரப்பு



  • மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது



  • 7 மாநிலங்களில் 27 எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குபதிவு : கர்நாடகா, உ.பி.யில் கடும் போட்டி



  • 5 நாடுகள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]