இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மனைவியை கொன்று தலைமறைவு செல்பியால் சிக்கியவர் சிறையில் அடைப்பு

6/9/2025 2:43:12 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

அரியலூர்: அரியலூரில் மனைவியை கொன்று 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் செல்பி போட்டோவால் போலீசில் சிக்கினார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரியலூர் மாவட்டம், நிண்ணியூரை சேர்ந்தவர் மணி (45). இவரது மனைவி விஜயலட்சுமி. வெளிநாட்டில் வேலை செய்து வந்த மணி, 2009ல் ஊர் திரும்பினார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த மணி, அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். 2009 ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட தகராறில் கழுத்து அறுத்து மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவானார். அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசாமியை தேடி வந்தனர்.

இதற்கிடையே சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் மணி கடந்த 3 வருடமாக சர்வராக விஜயகுமார் என்ற பெயரில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஓட்டலில் வேலை செய்த தினேஷ் என்ற நண்பருடன் ஒரே அறையில் தங்கியுள்ளார். அவ்வப்போது தினேஷ் செல்பி எடுப்பது வழக்கமாம். செல்பி எடுத்து பேஸ்புக்கில் தினேஷ் போட்டுள்ளார்.

இந்தப்பதிவை அரியலூரில் உள்ள விஜயகுமாரின் உறவினர்கள் பார்த்து, சென்னை புது வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று மணியை கைது செய்து, அரியலூர் போலீசாருக்கு தெரிவித்தனர். அரியலூர் டிஎஸ்பி முத்துக்கருப்பன் உத்தரவின் பேரில் செந்துறை இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் தலைமையில் சென்னை சென்ற போலீசார் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசாரின் அனுமதி பெற்று மணியை கைது செய்து செந்துறை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
'

மேலும் சில
  • காவிரி, வெண்ணாற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளிய 20 மாட்டு வண்டிகள் பறிமுதல்



  • பலாத்காரம் செய்ததால் சிறுமி தற்கொலை மேஸ்திரி கைது



  • வேலை வாங்கித்தருவதாக மோசடி போலி உதவி கலெக்டர் கைது



  • கொடைக்கானல் நீர்வீழ்ச்சியில் சிறுமியுடன் செல்பி; 12 பேர் கைது



  • தந்தை அடித்துக்கொலை மகன் உட்பட 2 பேர் கைது



  • பீகாரில் மதிப்பெண் பட்டியலில் மோசடி பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது



  • தந்தையை கொலை செய்த வழக்கு காதலனுடன் மகள் சரண்



  • சென்னையில் நடந்த முடி மாற்று சிகிச்சையில் பலியான திருச்சி டாக்டரின் உடல் மறு பரிசோதனை முக்கிய உறுப்புகள் ஆய்வுக்கு செல்கின்றன



  • ராயபுரம் அடகு கடையில் கத்திமுனையில் ரூ. 50 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்தது வடமாநில வாலிபர்கள்? 3 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டை



  • மது விருந்து தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை 2 பேர் கைது



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]