தமிழக எல்லையில் ஒன்றரை டன் செம்மரம் கடத்தல் 2 கார்கள் பறிமுதல்
6/9/2025 2:16:50 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த தமிழக எல்லையில் ஆரம்பாக்கம் பகுதியை ஒட்டிய பீமார்பாளையத்தில் இன்று காலை 2 கார்களில் செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக தடா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து, ஆரம்பாக்கத்தை ஒட்டியுள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 கார்கள் நிற்காமல் வேகமாக பறந்து சென்றது. இதைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார், அந்த 2 கார்களையும் பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.அந்த 2 கார்களையும் பீமார்பாளையம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரைப் பார்த்ததும் 2 கார் டிரைவர்களும் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். அந்த 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.