மருத்துவமனையில் நடிகர் ரித்திஷ் அட்மிட்
6/8/2025 4:08:10 PM
சென்னை: நடிகர் ரித்திஷுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்திஷ். தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். திமுகவில் இருந்த போது எம்பியாகவும் ேதர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அதன்பின், அதிமுகவில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவர் ஜிம்முக்கு சென்றிருந்த போது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரித்திஷ் தரப்பில் விசாரித்தபோது, உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது.