திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ₹2.31 கோடி காணிக்கை
5/25/2016 4:59:36 PM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 2.31 கோடி ரூபாய் உண்டியல் பணம் வசூலாகி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் நேர்த்திகடனாக பணம், நகைகள் மற்றும் தலைமுடி செலுத்துகின்றனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணிவரை 15 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 910 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 31 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 12 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 16 அறைகளில் காத்திருந்து 8 மணி நேரத்துக்கு பிறகு தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் ₹2.31 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர் என ேதவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.