இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ரவுடி கும்பல் அரிவாள் தாக்குதல் 4 பேர் சிறையில் அடைப்பு

5/23/2016 3:09:57 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடியில் நேற்று முன்தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் போதையில் மோட்டார் பைக்கில்  அரிவாளுடன் எஸ்எம்.நகர், மல்லிப்பூ காலனி, லேபர் நகர், முல்லை நகர், சாமந்திப் பூ காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  சாலையில் நடந்து சென்றவர்களை தாறுமாறாக வெட்டினர்.இதில் எஸ்எம்.நகரை சேர்ந்த பிரகலாதன் (17), ஜி.கல்யாணபுரத்தை  சேர்ந்த சுரேஷ்குமார் (18), லேபர் நகரை சேர்ந்த வேலு (35), மல்லிப்பூ காலனியை சேர்ந்த புருஷோத்தமன் (38), சாமந்திபூ  காலனியை சேர்ந்த சந்திரன் (38), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முனியாண்டி (22) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்து,  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜி.கல்யாணபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தினேஷ்குமார் (22), அதே  பகுதியை சேர்ந்த அருண் (22), தென்னரசு (23) ஆகிய 3 பேரை வண்ணாரப்பேட்டையில் கைது செய்து விசாரித்தனர்.போலீஸ் விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் வியாசர்பாடி, சாமந்திப்பூ காலனியை சேர்ந்த ராசி கமல் என்ற  ரவுடிக்கும் தினேஷ்குமாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ராசிகமலை தினேஷ்குமார் வெட்டிவிட்டான். இதைத் தொடர்ந்து,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராசிகமல் தனது நண்பர் கிஷோர் என்பவருடன் தினேஷ்குமார் மீது பதிலடி  தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தான்.

பின்னர் சிறிது நாட்கள் கழித்து ராசிகமல் சிகிச்சை முடிந்து வெளியேறி, ஜி.கல்யாணபுரத்தில் வைத்து தினேஷ்குமாரை  அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது தினேஷ்குமார் தப்பிச் செல்லவே, அவரது கூட்டாளி கோகுல்நாத் மீது சரமாரி  அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், வியாசர்பாடியில் உள்ள  ராசிகமலை வெட்டுவதற்காக நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார், தனது கூட்டாளிகளான அருண் மற்றும் தென்னரசு  ஆகியோருடன் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அவர் கிடைக்காத ஆத்திரத்தில், சாலையில் சென்ற மக்கள் மீது  அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார் எனத் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து தினேஷ்குமார், அருண், தென்னரசு மற்றும்  ராசிகமலின் கூட்டாளியான கிஷோர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • பைக் திருடிய 2 பேர் கைது



  • ரூ.14 லட்சம் கடற்குதிரையை கடத்தியவர் கைது



  • சென்னை தம்பதியிடம் ஓடும் ரயிலில் நகை பறித்த 2 வாலிபர்களுக்கு சிறை



  • போலி நகை அடகு மோசடி : சென்னை வாலிபர் கைது



  • கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அடித்துகொலை செய்த மனைவி உள்பட 4 பேர் கைது



  • பெண் கொலை: கள்ளக்காதலன் கைது



  • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பூ வியாபாரி வெட்டிக்கொலை



  • கத்தார், குவைத்தில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கம் ஏர்போர்ட்டில் சிக்கியது : பெண் உள்பட 2 ‘குருவி’கள் கைது



  • பைக் பெட்டியில் 1 லட்சம் அபேஸ்



  • குரோம்பேட்டையில் பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]