இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

புழல்-கிராண்ட்லைனில் முடிக்கப்படாத அரைகுறை மேம்பாலப் பணி ஓரு பக்க சுவரில் விரிசல்

5/23/2016 2:34:27 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

புழல்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாய் உள்ளது. புழல்-கிராண்ட்லைன் இணைக்கும் பகுதியில் பல ஆண்டுகளாக பாலம் இல்லாததால், மழைக் காலத்திலும் உபரிநீர் திறந்துவிடும் காலத்திலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட நகர்பகுதி பொதுமக்கள் சாலையைப் பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இக்காலத்தில் செங்குன்றம் வரை சென்று சுற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் விரைவிலேயே பாலம் கட்டக் கோரி கிராண்ட்லைன் ஊராட்சி சார்பில் கோரிக்கை விடுத்தனர்.தமிழக ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நபார்டு திட்டத்தின்கீழ், புழல் ஏரி உபரிநீர் கால்வாய்மீது மேம்பாலம் கட்டும் பணி ₹2.85 கோடி மதிப்பீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் துவங்கியது.

ஆனால், அப்பணிகள் தற்போது மந்தகதியில் உள்ளது. மேலும், அங்கு தரமற்ற முறையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தின் ஒரு பக்கச் சுவர்களில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கிராண்ட்லைன் ஊராட்சி தலைவர் ஏழுமலை கூறுகையில், ‘இந்த மேம்பாலத்தை சரியான முறையில், வரும் மழைக் காலத்துக்குள் கட்ட வேண்டும். இப்பணிகளை மிக விரைவில் தரமான முறையில் முடித்தால், இப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு எளிதில் உதவும். இல்லாவிட்டால், அப்பகுதி மக்கள் சுமார் 5 கிமீ தூரம் சுற்றிவர வேண்டியிருக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, இப்பாலப் பணிகளை தரமான முறையில் உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஏழுமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சில
  • புதுவை சட்டமன்ற தேர்தல்: 77% பேர் டெபாசிட் இழப்பு



  • திருவள்ளூரில் கம்ம நாயுடு மகாஜன சங்க யுகாதி விழா



  • திருத்தணி, திருவாலங்காட்டில் விடுபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை



  • திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு



  • செங்கல்பட்டு திமுக எம்எல்ஏவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் வாழ்த்து எம்.கே.தண்டபாணி பங்கேற்பு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் இடையூறாக இருந்த டிஜிட்டல் பேனர், கம்பங்கள் அகற்றம்



  • ஸ்ரீஆர்.எம்.ஜெயின் வித்யாபீடம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி



  • தூத்துக்குடி மாவட்டத்தில் டெபாசிட் பறிகொடுத்த 72 வேட்பாளர்கள்



  • பிளஸ்2 பொது தேர்வில் நடேசன் பள்ளி 99.8% தேர்ச்சி மாணவிகள் முன்னிலை



  • சாமி பல்லக்கு தூக்குவதில் அடிதடி தகராறு



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]