மத்திய பிரதேசத்தில் தேர்தல் வழக்கில் பாஜ எம்பிக்கு வாரண்ட்
5/23/2016 2:22:06 PM
போபால்: மத்திய பிரதேசத்தில் தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் பாஜ எம்பி மற்றும் அமைச்சருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தில் கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது தேர்தல் விதிமுறை மீறியதாக பாஜ எம்பி மனோஜ் திவாரி, அமைச்சர்கள் ஷிவ்பால் யாதவ், பரஸ்நாத் யாதவ் மற்றும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீண்ட காலமாக பல முறை சம்மன் அனுப்பியும் தினேஷ் திவாரியும், ஷிவ்பால் யாதவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த வழக்கு போல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சத்யவான் சிங் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாஜ எம்பி மனோஜ் திவாரி, அமைச்சர்கள் ஷிவ்பால், பரஸ்நாத், சமாஜ்வாடி எம்எல்ஏ ஜாஹித் பெக், சமாஜ்வாடி மாவட்ட தலைவர் ஆரிப் சித்திக்கி ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.மேலும் இந்த வழக்கில் ஜூன் 14ம் தேதி இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறை எஸ்பிக்கும் உத்தரவிட்டார்.