செங்கல்பட்டு திமுக எம்எல்ஏவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் வாழ்த்து எம்.கே.தண்டபாணி பங்கேற்பு
5/21/2016 12:22:59 PM
கூடுவாஞ்சேரி: தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவில், செங்கல்பட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏவுக்கு நேற்று பல்வேறு திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து, மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.இதில், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்கேடி.கார்த்திக், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் செயலாளர் எம்.கே.ராஜி, ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் கே.எஸ்.ரவி, வண்டலூர் ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன், நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம், ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெவிஎஸ்.ரங்கநாதன், காயரம்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீராமன், முன்னாள் தலைவர்கள் மண்ணிவாக்கம் எம்டி.லோகநாதன், கீரப்பாக்கம் ராஜேந்திரன், கல்வாய் தயாளன், மாவட்ட பிரதிநிதிகள் வில்சன் சாம்ராஜ், எம்டி.சண்முகம், ஆராவமுதன், ஜெ.ஆறுமுகம், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கருணாகரன், இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி பத்மநாபன், குமிழி ஊராட்சி கழக செயலாளர் மேகநாதன், காயரம்பேடு சுப்பிரமணி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.