இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஜெ.வை வீழ்த்திக் காட்டும் இளங்கோவன் உறுதி

5/2/2025 3:42:00 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

அறந்தாங்கி: அறந்தாங்கியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து மாநில காங்கிரஸ்தலைவர்  ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியதாவது:இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல். நல்லவர்களுக்கும்  கெட்டவர்களுக்கும் நடைபெறும் தேர்தல். தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் கொளுத்தும் வெயிலில் பொதுமக்களை அடைத்து  வைத்து கொல்பவர்கள் தான் கெட்டவர்கள். தமிழகத்தில் நல்ல திட்டங்களை நிறைவேற்றுவேன், நல்லதை செய்வேன் என  பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவர் ஜெயலலிதா. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழக மக்களுக்கு  செய்தது வெறும் ஜீரோ தான். காரணம் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை. மக்களை மக்களாகவே  மதிக்கவில்லை.

சென்னையில் ஏரியை திறந்து விட்டதால் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனையில்  சிகிச்சிசைக்காக சேர்க்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் தங்கள் உடைமைகளை இழந்தார்கள். அப்போது மக்களை சந்தித்து  ஜெயலலிதா ஆறுதல் சொன்னாரா, அவர்களை கண்டு கொள்ளவில்லை. ஒரே ஒரு முறை காரில் இருந்தபடியே அன்பார்ந்த  வாக்காள பெருமக்களே என கூறி சென்றார்.

நமது வாழ்க்கை வளம் பெற வேண்டுமானால் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை  அள்ளி தெளித்து ஆட்சி வந்த ஜெயலலிதாவை வீழ்த்த திமுக, காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே முடியும். வீழ்த்திக்காட்டும்.  தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்புடன் வாழ திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

காரைக்குடியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர்.ராமசாமியை ஆதரித்து பேசுகையில், ‘இந்தியாவிலேயே  மக்களை சந்திக்காத ஒரு முதல்வர் ஜெயலலிதா தான்.  ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு மேஜையை தட்டுவது,  அமைச்சர்களுக்கு காலில் விழுவதுதான் வேலை. அவர்களை கொத்தடிமைகளாக வைத்துள்ளார். லஞ்சம் லாவண்யத்தின்  மொத்த உருவம் ஜெயலலிதா’ என்றார்.

மேலும் சில
  • திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை



  • மு.க.ஸ்டாலின் 3ம் கட்ட பிரசாரம், பொதுக்கூட்டம் விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்



  • ரேஷன் பொருட்கள் ஒரே நாளில் கிடைக்க செய்வேன் ராயபுரம் தமாகா வேட்பாளர் பிஜூ சாக்கோ வாக்குறுதி



  • வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டுக்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்.டி.மோகன் அழைப்பு



  • அலங்காநல்லூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு



  • இரண்டாவது நாளாக 3 சிறப்பு ரயில்கள் மூலம் 3,000 துணை ராணுவத்தினர் இன்று சென்னை வந்தனர்



  • மணல் விற்பனையில் அதிமுக அரசு ரூ. 20,000 கோடி கொள்ளை அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு



  • அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு வீரவாள் மக்கள் உற்சாக வரவேற்பு



  • பிரசாரம் செய்தபோது திருநாவுக்கரசர் மயங்கி விழுந்தார்



  • புதுப்பேட்டை போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரகடத்தில் ஆட்டோ நகரம் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் உறுதி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]