இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஓட்டு கேட்க சென்றபோது அமைச்சர் பழனியப்பனுக்கு கடும் எதிர்ப்பு : ரோட்டில் மரங்களை போட்டு தடுக்க முயற்சி

5/2/2025 3:41:10 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பழனியப்பன் ஓட்டு கேட்டு சென்றபோது  கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மீண்டும் ஓட்டு கேட்க வருவதா? என்று அவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில், அமைச்சர் பழனியப்பன் மீண்டும் போட்டியிடுகிறார். தீவிர  ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று தொகுதிக்கு உட்பட்ட மோட்டாங்குறிச்சி ஊராட்சி நத்தமேடு  கிராமத்திற்கு பிரசாரத்திற்காக சென்றார்.

 அப்போது, வழக்கம்போல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த முறை வைத்த கோரிக்கைகளில் எதனையும்  நிறைவேற்றாமல், மீண்டும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்க வந்தீர்கள் என கேட்டனர். அவர்களை  சமாதானப்படுத்த அமைச்சர் பழனியப்பன் முயன்றார்.இதுதொடர்பாக ஊர் மக்களுக்கும், அமைச்சருடன் வந்த  அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூச்சல், குழப்பம் நிலவியதோடு, திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது,  பிரசார வேனில் நின்றுகொண்டிருந்த அமைச்சர் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

 உடனே, அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் அவரை சுற்றிலும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி காப்பாற்றினர்.  இதையடுத்து, அமைச்சர் மற்றும் அதிமுகவினர் அங்கிருந்து அவசரம் அவசரமாக புறப்பட்டுச்சென்றனர்.அப்போது, வழிநெடுகிலும்  கற்கள் மற்றும் மரங்களை போட்டு தடுப்பு ஏற்படுத்தியிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே, அவற்றை அப்புறப்படுத்தியவாறு  அங்கிருந்து சென்றனர்.

கல்வீச்சு சம்பவத்தில் அமைச்சரின் கார் கண்ணாடி உடைந்தது. மேலும், உடன் சென்ற வாகனங்களும் சேதமடைந்தன.சம்பவம்  குறித்த தகவலின் பேரில், பொம்மிடி போலீசார் நத்தமேடு கிராமத்திற்கு சென்று விசாரித்தனர். அமைச்சர் பழனியப்பன் மீது  கல்வீச்சு சம்பவம் தொடர்பாக அரூர் டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி நேரடி விசாரணை நடத்தினார். இதையடுத்து, அந்த ஊரைச்  சேர்ந்த 20 பேர் மீது பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் சில
  • திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை



  • மு.க.ஸ்டாலின் 3ம் கட்ட பிரசாரம், பொதுக்கூட்டம் விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்



  • ரேஷன் பொருட்கள் ஒரே நாளில் கிடைக்க செய்வேன் ராயபுரம் தமாகா வேட்பாளர் பிஜூ சாக்கோ வாக்குறுதி



  • வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டுக்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்.டி.மோகன் அழைப்பு



  • அலங்காநல்லூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு



  • இரண்டாவது நாளாக 3 சிறப்பு ரயில்கள் மூலம் 3,000 துணை ராணுவத்தினர் இன்று சென்னை வந்தனர்



  • மணல் விற்பனையில் அதிமுக அரசு ரூ. 20,000 கோடி கொள்ளை அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு



  • அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு வீரவாள் மக்கள் உற்சாக வரவேற்பு



  • பிரசாரம் செய்தபோது திருநாவுக்கரசர் மயங்கி விழுந்தார்



  • புதுப்பேட்டை போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரகடத்தில் ஆட்டோ நகரம் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் உறுதி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]