இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அமைச்சர்கள் தொகுதிகளை கண்காணிக்க 42 தேர்தல் செலவின பார்வையாளர்கள் ராஜேஷ் லக்கானி பேட்டி

5/2/2025 3:06:14 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

சென்னை: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியது:தமிழக சட்டமன்ற தேர்தலில், 2 தொகுதிக்கு ஒரு தேர்தல்  செலவின பார்வையாளர் என மொத்தம் 124 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது, தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி  தலைவர்கள் போட்டியிடும் 42 தொகுதிகளை கண்காணிக்க, கூடுதலாக 42 தேர்தல் செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர்கள்,  இன்று தமிழகம் வருவார்கள். இது தவிர, 122 பொது பார்வையாளர்கள், 31 போலீஸ் பார்வையாளர்கள், 118 ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளும் தேர்தல்  பார்வையாளர்களாக வர உள்ளனர். அரசியல் பொதுக்கூட்டங்களில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வர தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  அப்படி அழைத்து வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2011ம் ஆண்டு 58,761 வாக்குப்பதிவு மையங்கள் இருந்தது. இது வரும் தேர்தலில் 66,001 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் 3  பறக்கும் படை என இருந்த எண்ணிக்கை, 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பறக்கும் படைக்கு என தனி வாகனம் இன்று முதல் ஒதுக்கப்பட்டுள்ளது.பூத் சிலிப் பிரிண்ட்  செய்யும் பணி தொடங்கியுள்ளது. இன்னும் 3 நாட்களில் முடிவடைந்து விடும். 5ம் தேதி முதல் வீடு வீடாக தேர்தல் ஆணையம் சார்பில் பூத் சிலிப்  வழங்கப்படும். 3ம் தேதி மாலை முதல் ஒவ்வொருவருக்கும் எஸ்எம்எஸ் மூலம், தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள், எந்த  வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.

தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்கா நாளை சென்னை வருகிறார். அவர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுர் மாவட்ட  கலெக்டர்கள் மற்றும் பார்வையாளர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.நடிகர்கள் வாக்களிக்க தனி வரிசை கிடையாது. ஆண்கள், பெண்கள்  தனித்தனி வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் வரிசையில் நிற்காமல் வாக்களிக்கலாம்.இவ்வாறு  அவர் கூறினார்.

மேலும் சில
  • திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை



  • மு.க.ஸ்டாலின் 3ம் கட்ட பிரசாரம், பொதுக்கூட்டம் விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்



  • ரேஷன் பொருட்கள் ஒரே நாளில் கிடைக்க செய்வேன் ராயபுரம் தமாகா வேட்பாளர் பிஜூ சாக்கோ வாக்குறுதி



  • வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டுக்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்.டி.மோகன் அழைப்பு



  • அலங்காநல்லூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு



  • இரண்டாவது நாளாக 3 சிறப்பு ரயில்கள் மூலம் 3,000 துணை ராணுவத்தினர் இன்று சென்னை வந்தனர்



  • மணல் விற்பனையில் அதிமுக அரசு ரூ. 20,000 கோடி கொள்ளை அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு



  • அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு வீரவாள் மக்கள் உற்சாக வரவேற்பு



  • பிரசாரம் செய்தபோது திருநாவுக்கரசர் மயங்கி விழுந்தார்



  • புதுப்பேட்டை போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரகடத்தில் ஆட்டோ நகரம் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் உறுதி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]