இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அதிகாரிகள் இடமாற்றத்தை ரத்து செய்ய நஜீம் ஜைதியிடம் தம்பிதுரை மனு

5/2/2025 3:04:45 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

திருவனந்தபுரம்: தமிழக சட்டசபை தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி பெரும் அளவில் முறைகேடு செய்வதாகவும்,  கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல்  ஆணையத்திடம் புகார்கள் தெரிவித்தனர். இதையடுத்து தலைமை தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கை காரணமாக 3 முறை ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள்  இடமாற்றம் செய்யப்பட்டனர்.சட்டம் ஒழுங்கு டிஜிபி அசோக்குமார் தேர்தல்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் அவருக்கு பதில் போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபி  மகேந்திரன் தேர்தல்பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். மேலும் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு ஏடிஜிபி கரன்சின்ஹா நியமிக்கப்பட்டார்.

மேலும் ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை,தர்மபுரி, சேலம், நாமக்கல், ஆகிய 7 மாவட்ட எஸபிக்கள் மற்றும் கரூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி,  புதுக்கோட்டை, சேலம், வேலூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி உள்பட 9 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டனர்.இதற்கிடையே தமிழக அதிகாரிகள் மாற்றத்தை  வாபஸ் பெறக்கோரி தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுகவை சேர்ந்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று மனு கொடுத்தார்.  திருவனந்தபுரத்தில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த நஜீம் ஜைதியிடம் தம்பிதுரை மனு கொடுத்தார். அப்போது இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை  மீண்டும் அதே பதவியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பின்னர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தேர்தல் கமிஷன் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு வருகிறது. அரசியல் கட்சிகளின்  பொய் புகார்களை தேர்தல் கமிஷன் நம்பி விட்டது. இதனால்தான் ஒரேயடியாக ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால்  அதிகாரிகள் நடுநிலையாகவே செயல்பட்டு வருகின்றனர். ஆகவே இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய தலைமை தேர்தல்  ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இதை ஏற்று அதிகாரிகள் இடமாற்றத்தை தேர்தல்ஆணையம் வாபஸ் பெறும் என நம்புகிறோம்’’ என்றார்.மத்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி  நேற்று இரவு திருவனந்தபுரம் வந்தார். அவருடன் தேர்தல் ஆணையாளர்களான ஓம் பிரகாஷ் ராவத், ஏ.கே. ஜோதி மற்றும் அதிகாரிகளும் வந்தனர். தொடர்ந்து  இன்று காலை திருவனந்தபுரம் தாஜ் ஓட்டலில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கேரள தலைமை செயலாளர்,  உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசித்தார்.

மேலும் சில
  • சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்



  • மேற்கு வங்கத்தில் நாளை இறுதி கட்ட வாக்குபதிவு



  • 33 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு மே. வங்கத்தில் நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு உச்ச கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு



  • திருப்பதி கோயிலில் ரூ. 3.03 கோடி காணிக்கை



  • திருப்பதி ஏழுமலையான் கோயில் மலையை சுற்றிலும் இரும்பு பாதுகாப்பு வேலி மது, புகையிலை, மாமிசம் தடுக்க ஏற்பாடு



  • உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு தேர்தல் வியூக நிபுணர் கருத்து



  • மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு கோவா அரசியலுக்கு திரும்ப பரிக்கர் முடிவு



  • ரூ. 3600 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல் விமானப்படை மாஜி தளபதியிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை



  • கேரளாவில் வெயிலுக்கு 12 பேர் பலி



  • வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகத்துக்கு கூடுதல் அதிகாரிகள் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி பேட்டி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]