மேக் இன் இந்தியாவை செயல்படுத்த மோடி இந்தியாவில் இருக்க வேண்டும்: அசோக் சவான் அட்டாக்
5/2/2025 2:21:11 PM
மும்பை: மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக மோடி லிவ் இன் இந்தியாவாக இருக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாஜி முதல்வர் அசோக் சவான் தாக்கியுள்ளார். மகாராஷ்டிரா மாஜி முதல்வரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான அசோக் சவான் கூறுகையில், பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்து வருகிறார். அதற்கு முன்னதாக அவர் லிவ் இன் இந்தியாவாக அதாவது அவர் இந்தியாவில் இருக்க வேண்டும். பின்னர் மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தொழிலாளர் நல சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை அறிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் தொழிலாளர் விரோத போக்கு உடையதாகும். மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்க்க அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்று சேர வேண்டிய நேரம் இதுவாகும். மும்பையில் மெட்ரோ ரயில், மோனோ ரயில் திட்டங்களை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. ஆனால் அதை தற்போதைய பாஜ அரசு ரத்து செய்து விட்டது என்றார்.