இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தேர்தல் ஆணையத்தின் தூண்டுதலில் போலீஸ் அதிகாரிகள் அராஜகம் மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

5/2/2025 2:19:51 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையத்தின் தூண்டுதலின் பேரில் சில அதிகாரிகள் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.  வரும் 5ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அதிக அளவு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 5ம் கட்ட வாக்குப்பதிவின் போதும் பல இடங்களில் இடதுசாரிகளுக்கும், திரிணாமுல் தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் சம்பவங்களை போலீசார் தடுக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் தூண்டுதலின் பேரில் ஒரு சில போலீஸ் அதிகாரிகள் அராஜகத்தை கட்டவிழ்த்து வருவதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சாந்திபுரில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்கள் 15 நாள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்தால் அது மிகவும் தவறு. யார் என்ன செய்கிறார்கள் என்பதை பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நடுநிலையுடன் நடந்து கொள்பவர்கள் மீது அன்பு காட்டுவேன்.

என்னை பகைத்துக் கொள்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு மம்தா பேசினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அரசு அதிகாரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த காலகட்டத்தில் எந்த அதிகாரிகளையும் மாற்றும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக எதிர்கட்சிகள் புகார் கூறிவருவதை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பல உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்



  • மேற்கு வங்கத்தில் நாளை இறுதி கட்ட வாக்குபதிவு



  • 33 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு மே. வங்கத்தில் நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு உச்ச கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு



  • திருப்பதி கோயிலில் ரூ. 3.03 கோடி காணிக்கை



  • திருப்பதி ஏழுமலையான் கோயில் மலையை சுற்றிலும் இரும்பு பாதுகாப்பு வேலி மது, புகையிலை, மாமிசம் தடுக்க ஏற்பாடு



  • உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு தேர்தல் வியூக நிபுணர் கருத்து



  • மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு கோவா அரசியலுக்கு திரும்ப பரிக்கர் முடிவு



  • ரூ. 3600 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல் விமானப்படை மாஜி தளபதியிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை



  • கேரளாவில் வெயிலுக்கு 12 பேர் பலி



  • வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகத்துக்கு கூடுதல் அதிகாரிகள் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி பேட்டி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]