யுவராஜ் சிங்குக்கு இன்ப அதிர்ச்சி நடிகை பிரீத்தி ஜிந்தா முடிவு
4/26/2016 2:31:28 PM
மும்பை: பாலிவுட்டின் பிரபல நடிகை பிரீத்தி ஜிந்தா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராக உள்ளார். இந்த அணியில் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீயும், இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கும் முந்தைய சில சீசன்களில் விளையாடியுள்ளனர். அப்போது பிரட் லீயுடனும், யுவராஜ் சிங்குடனும் பிரீத்தி ஜிந்தாவை இணைத்து கிசுகிசுக்கள் எழுந்தது. ஆனால் பிரீத்தி ஜிந்தா இதனை மறுத்து, இருவரும் தனக்கு சகோதரர்கள் என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “என்னிடம் உறுதி செய்யாமல், என்னுடைய வாழ்க்கையை பற்றி சிலர் எழுதுவதை பார்த்து நான் வியப்படைந்தேன். இதில், குறிப்பாக யுவராஜ் சிங்குடனும், பிரட் லீயுடனும் என்னை இணைத்து பேசியதை என்னால் எப்போதும் மறக்க முடியாது.
அவர்கள் இருவரும் என்னுடைய சகோதரர்கள். ரக்ஷா பந்தனின்போது, அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து ராக்கி கட்ட முடிவு செய்துள்ளேன்”என்றார். இதனிடையே யுவராஜ் சிங்குக்கும், பாலிவுட் நடிகை ஹசல் கீச்சுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதுகுறித்து பிரீத்தி ஜிந்தாவிடம் கேட்டபோது, கணிப்புகளுக்கு அப்பால், அவர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும், கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “யுவராஜ் சிங்குக்கு ஷாதியை பரிசாக அளிக்க உள்ளேன். மேலும் ஒரு பெட்டி நிறைய ராக்கி கயிறுகளையும் அளிப்பேன்” என்றார். பிரீத்தி ஜிந்தாவும், யுவராஜ் சிங்கும் தற்போது ஐபிஎல்லில் இரு வேறு அணிகளில் பிசியாக உள்ளனர்.