இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆலந்தூரில் திமுக வேட்பாளர் அறிமுகம் தமிழகத்தில் திமுக அலை வீசுகிறது மா.சுப்பிரமணியன் பேச்சு

4/21/2016 3:06:55 PM
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்: சதானந்த கவுடா அட்டாக் குஜராத்தில் சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை

ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று மாலை  ஆதம்பாக்கம், அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் என்.சந்திரன் தலைமை தாங்கினார். வடக்கு பகுதி  செயலாளர் பி.குணாளன், ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், செயற்குழு உறுப்பினர் கீதா ஆனந்தன், காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினர் பிராங்க்ளின்  பிரகாஷ், வட்டாரத் தலைவர் எம்.வி.குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் வரவேற்றார்.  இக்கூட்டத்தில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தா.மோ.அன்பரசனை அறிமுகப்படுத்தி, சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் சைதை சட்டமன்றத்  தொகுதி வேட்பாளருமான மா.சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் தா.மோ.அன்பரசன், இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று, பின்னர் அமைச்சராகி பல்வேறு மக்கள்நலப்  பணிகளை நிறைவேற்றி தந்துள்ளார். ஆனால், அதிமுகவில் அமைச்சராக இருந்தவர்கள் எந்த மக்கள்நலப் பணிகளையும் செய்யாததால், இப்போது ஓட்டு கேட்கப்  போகும் இடங்களில் நத்தம் விஸ்வநாதன் முதல் அன்வர் ராஜா வரை மக்களால் விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர்.இப்போது எங்கு பார்த்தாலும் திமுக அலை  வீசிக்கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார். பின்னர் திமுக வேட்பாளர் அன்பரசன் பேசும்போது, ‘ஆலந்தூரில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், தரமான  தார்சாலைகள், பூங்காக்கள், மின்நிலையங்கள் என பல கோடி திட்டங்களை திமுக ஆட்சியின்போது நிறைவேற்றி தந்துள்ளேன். என்னை மீண்டும்  தேர்ந்தெடுத்தால், இங்கு விடுபட்டு போன பணிகளை உறுதியாக நிறைவேற்றி தருவேன்’ என்றார்.இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம்  வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.ஆர்.சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சுற்றிய ஆவடி மாணவர் மீட்பு



  • ‘தமிழ் முரசு’ செய்தி எதிரொலி சுருட்டப்பள்ளி அணையிலிருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு நீர் திறப்பு



  • வாலாஜாபாத் தாலுகாவில் விபத்துகளை தடுக்க தீயணைப்பு நிலையம் பொதுமக்கள் வலியுறுத்தல்



  • தக்காளி விலை கிடு கிடு உயர்வு



  • திருத்தணி முருகன் கோயிலில் கடைகள் ஏலம்: பின்வாங்கிய வியாபாரிகள்



  • தாம்பரம் தாலுகாவில் புரோக்கர்களின் பிடியில் இ-சேவை மையம்: பொதுமக்கள் புகார்



  • கிணற்றில் மூழ்கி சென்னை ஐடிஐ மாணவர் தம்பியுடன் பலி



  • நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் வீட்டுவசதி வாரிய பொருட்கள் ஜப்தி ஊழியர்கள் ஓட்டம்



  • தஞ்சை தேர்தல் ரத்து விவகாரம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக மோதல்



  • கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறை



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]