இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மே.வங்க 3ம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குபதிவு

4/21/2016 2:36:12 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 3ம் கட்டமாக 62 தொகுதிகளில் இன்று நடைபெற்ற தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாயின.தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுடன் மேற்குவங்க சட்டமன்றத்துக்கும் கடந்த மார்ச் 4ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் கடந்த 4 மற்றும் 11 தேதிகளில் அமைதியாக நடந்து முடிந்தன. இதில் சராசரியாக 80 சதவீத வாக்குகள் பதிவாயின. மூன்றாம் கட்டமாக இன்று முர்ஷிதாபாத், நாடியான, பர்தான் மாவட்டங்கள் மற்றும் வடக்கு கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் 62 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 34 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 418 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 42 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

 இவர்களில் 65 லட்சம் பேர் பெண்கள். மக்கள் வாக்களிப்பதற்காக சுமார் 16 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்த பயமும் இன்றி வாக்களிப்பதற்காக 75 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் மாநில போலீசாரும் சேர்ந்து மொத்தம் 1 லட்சத்துக்கும் அதிகமாக பாதுகாப்பு வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு மையத்தில் வெளிப்புற பாதுகாப்பு பணியில் விரைவாக பதில் தரும் குழு, 190 பறக்கும் படை குழுக்கள், 194 கண்காணிப்பு குழுவினர் பணியில் உள்ளனர். இது தவிர  இணையதள கேமிரா மூலம் கண்காணிப்பு, வீடியோ டிஜிட்டல் கேமிராவும் வாக்குப்பதிவு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

மேலும் சில
  • ஏழுமலையான் கோயில் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் பக்தர்கள் அச்சம்



  • கேரள விளையாட்டு கவுன்சிலில் ஊழல் அமைச்சருக்கு அஞ்சு பாபி ஜார்ஜ் கடிதம்



  • தீவிரவாதிகள் தாக்குதல் 6 போலீசார் படுகாயம் காஷ்மீரில் பரபரப்பு



  • ராஜஸ்தானில் டைனோசர் காலடி தடம் 150 மில்லியன் ஆண்டு பழமையானது



  • இந்திய இணையதளங்களை குறிவைக்கும் சக்பிளை சீனாவில் இருந்து அதிகரிக்கும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் ராணுவம் எச்சரிக்கை



  • பாஜ தேசிய செயற்குழு போஸ்டர்களில் ஜோஷியை ஓரங்கட்டுவதா? தொண்டர்கள் கொதிப்பு



  • வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்: சதானந்த கவுடா அட்டாக்



  • குஜராத்தில் சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை



  • ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை மறுப்பு: 5 தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம்; டெல்லி ஆம் ஆத்மி அரசு அதிரடி



  • இந்திய எல்லைக்குள் நுழைந்த 3 பாகிஸ்தான் சிறுவர்கள் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர்



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]