இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வாலிபர் கொலையில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு

4/21/2016 2:35:00 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

அரியலூர்: ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் சின்னி ஜெயந்த்(26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்தார். சின்னி ஜெயந்தின் தம்பி விநாயக ஆனந்த்தின் மனைவி கவுதமி(22), போலீஸ் வேலைக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்காக அதே ஊரை சேர்ந்த அய்யாப்பிள்ளை மகன் திவாகர்(22) என்பவரின் உதவியை நாடினார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் திவாகர் கவுதமியின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், திவாகரை கண்டித்தார் சின்னிஜெயந்த். ஆனாலும், கடந்த 2012 ஏப்ரல் 19ல் கவுதமி வீட்டின் முன்பு நின்றிருந்தபோது, சின்னிஜெயந்த், திவாகரை தாக்கினார்.

ஆத்திரமடைந்த திவாகர், மறுநாள் 20ம் தேதி தனது தந்தை அய்யாபிள்ளை மற்றும் கூட்டாளிகள் சுரேஷ்(23), பரமசிவம்(40), மணிகண்டன்(33), பார்த்தீபன்(30), விக்னேஷ்(39), அர்ஜூனன்(60), ஆனந்த்(30), அன்பரசன்(45), கலைமணி(26), குண்டு சுரேஷ்(27), சுரேஷ்(22), கொளஞ்சி(22) ஆகியோருடன் சின்னிஜெயந்த் வீட்டுக்கு சென்று, உருட்டுக்கட்டை, இரும்பு கம்பியால் தாக்கி கொன்றனர்.

ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து திவாகர் உட்பட 14 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரஹ்மான், குற்றவாளிகள் 14 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளிகள் 14 பேரையும் பலத்த பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். தீர்ப்பு வழங்கப்பட்ட இதேநாளில்தான் 2 வருடங்களுக்கு முன்பு சின்னி ஜெயந்த் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • 1.5 டன் மருந்து பொருட்கள் கடத்தியவர்கள் கைது



  • சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு துணைபோன போலீஸ், சுங்கத்துறை அதிகாரிகள் யார்? பட்டியல் தயாராகிறது



  • பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு



  • மனைவி படுகொலை: கணவருக்கு வலை



  • வேலை வழங்காததை கண்டித்து என்எல்சி தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை முயற்சி



  • ரோட்டில் நடந்து சென்ற பள்ளி ஆசிரியை கழுத்து அறுப்பு : வாலிபர் தற்கொலை முயற்சி ஒரு தலை காதலால் விபரீதம்



  • பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நபரிடம் நகைப்பை அபேஸ்



  • ஊரை விட்டு ஒதுக்கிவைத்ததால் பெண் கவுன்சிலர் விஷம் குடித்தார்



  • குடிபோதையில் விபரீதம் தலையில் கல்லை போட்டு மகனை கொன்ற தந்தை



  • மயக்க மாத்திரை கொடுத்து மாணவி பலாத்காரம் கிராமத் தலைவரிடம் விசாரணை



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]