இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

புழல் பகுதியில் வணிகவரி சோதனை சாவடியால் வாகன நெரிசல் இடம் மாற்ற செய்ய கோரிக்கை

4/16/2016 12:48:58 PM
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்: சதானந்த கவுடா அட்டாக் குஜராத்தில் சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை

புழல்: ஜிஎன்டி சாலை பகுதியில் புழல் அருகே வணிகவரி சோதனை சாவடி மையத்தில் வெளிமாநிலம் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் நிறுத்துகின்றனர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை  விடுக்கின்றனர்.புழல், காவாங்கரை ஜிஎன்டி சாலை அருகே தமிழக வணிகவரி சோதனை சாவடி மையம் உள்ளது.  சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும்  கொல்கத்தாவுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களை ஜிஎன்டி சாலையிலேயே வணிகவரி அதிகாரிகள் நிறுத்துவது வழக்கம்.இந்த வாகனங்களில் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கான ஆவணங்களின் சோதனைகளை முடித்து, அவர்கள் பணம் கட்டி வாகனங்களை எடுத்துச் செல்வதற்கு  நீண்ட நேரம் தாமதம் ஏற்படுகிறது.

ஜிஎன்டி சாலையிலேயே பெருமளவு கனரக லாரிகள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சுமார் 50 அடி  தூரத்திலேயே காவாங்கரை சிக்னல் உள்ளது. இந்த சிக்னலினாலும் இங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.வணிகவரி சோதனை மையத்தை ஒட்டிய  ஜிஎன்டி சாலையில் பெரும்பாலான நேரங்களில் கனரக வாகனங்கள் தாறுமாறாகவும், ஒன்றை ஒன்று முந்திச் செல்லும்போதும் ஏராளமான விபத்துகள்  ஏற்படுகிறது.இது குறித்து சம்பந்தப்பட்ட வணிக வரித்துறை அலுவலகத்துக்கு பலமுறை வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் புகார் தெரிவித்தும், அவர்கள்  இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, இங்குள்ள வணிகவரி சோதனை அலுவலகத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத சோழவரம்  பைபாஸ் சாலை அருகே மாற்றியமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் சில
  • ஆர்.கே.பேட்டை அருகே உடைந்து விழும் நிலையில் அரசு பள்ளி



  • ஒரகடம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் பற்றாக்குறையால் குற்றங்கள் அதிகரிப்பு



  • திருமுல்லைவாயல் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கை ஜமாபந்தியில் புரட்சி பாரதம் மனு



  • நோயாளிகள் தொடர் புகார் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அதிகாரி திடீர் ஆய்வு



  • விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்



  • 100 வயதை எட்டிய தியாகி



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 3ம் தேதி முதல் ஜமாபந்தி துவக்கம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு



  • புதுவை சட்டமன்ற தேர்தல்: 77% பேர் டெபாசிட் இழப்பு



  • புழல்-கிராண்ட்லைனில் முடிக்கப்படாத அரைகுறை மேம்பாலப் பணி ஓரு பக்க சுவரில் விரிசல்



  • திருவள்ளூரில் கம்ம நாயுடு மகாஜன சங்க யுகாதி விழா



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]