உத்திரமேரூரில் அபூர்வ ஆந்தை பிடிபட்டது
4/9/2025 12:15:38 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சோமநாதபுரம் பகுதியில் குடிநீர் டேங்க் அருகில் காயங்களுடன் ஒரு ஆந்தை கிடப்பதை அவ்வழியே சென்ற மக்கள் பார்த்தனர். உடனடியாக உத்திரமேரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், அபூர்வ ஆந்தையை பிடித்தனர். அது ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆந்தை என தெரியவந்தது. அந்த ஆந்தையை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.