வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்
4/9/2025 12:10:48 PM
உலகம் முழுவதும் செல்போனில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு புதுமைகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. வாட்ஸ்அப் குரூப்பில் ஏற்கெனவே 100 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதை மாற்றி, தற்போது 256 பேர் வரை என எண்ணிக்கையை உயர்த்தியது.இதன் தொடர்ச்சியாக, வாட்ஸ்அப்பில் மறையாக்கம் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஒருவருக்கு அனுப்பப்படும் தகவல்கள், புகைப்படம், வீடியோ என எதுவானாலும் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படும். இதன்மூலம் தகவல்களை யாரும் இடைமறித்து ஹேக் (திருட) செய்ய முடியாது. இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனர் ஜான்கும் கூறுகையில், ‘தகவல்களை பாதுகாக்க தற்போது புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதை அப்டேட் செய்வதன் மூலம் உங்களது தகவல்கள், புகைப்படம், வீடியோ, காணொலி, குரூப்பில் பேசுவது போன்றவற்றை யாராலும் திருட முடியாது, இடைமறித்து பார்க்க முடியாது. ஏன் நாங்களே கூட எடுக்க முடியாது’ என்றார்.