செல்ல பிராணிகளான நாய்கள்
4/8/2025 2:12:29 PM
இங்கிலாந்து நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்க்கிறார்கள். செல்லமாக வளர்க்கும் நாய்கள் காணாமல் போனால் குடும்பத்தில் ஒருவரை இழந்ததாக கருதி போலீசில் புகார் கொடுக்கிறார்கள். இதைத் தடுப்பதற்கு, நாய் வளர்ப்பில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி, நாய்களின் கழுத்துக்கு பின்புற தோலின் கீழ்பகுதியில் சிறிய மைக்ரோ சிப் ஒன்றை பொருத்த வேண்டும். அதில் 15 எண்கள் கொண்ட ரகசிய குறியீடு பொறிக்கப்படும். அந்நாய் பிறந்து 8 வாரங்களுக்குப் பிறகே இந்த சிப் பொருத்தப்படும். அவ்வாறு நாய்களில் பொருத்தப்பட்ட மைக்ரோ சிப்பை போலீஸ் ஸ்கேன் செய்யும்போது, அதன் உரிமையாளர் யார் என்பதை அறிய முடியும். இதனால் காணாமல் போகும் நாய்களை உடனடியாக மீட்டு, சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவும் என்று போலீசார் கூறுகின்றனர்.