இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ. 50 தரிசன டிக்கெட் திடீர் ரத்து

4/2/2025 12:15:17 PM
மீண்டும் நெருக்கடி நிலை கால அச்சம்: ராம்ஜெத்மலானி பேச்சு பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட வழக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு துணை முதல்வர் சுக்பீர் சிங் விடுவிப்பு: பஞ்சாப் கோர்ட் தீர்ப்பு

திருமலை: திருப்பதியில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தலைமையில் பக்தர்களிடம் குறைகள் மற்றும் ஆலோசனைகள் கேட்கும் டயல் யுவர் இஓ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நிருபர்களிடம் சாம்பசிவராவ் பேசியதாவது :ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு ஒரு அறை மட்டும் ஒதுக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோயில் கொடிமரத்தை தாண்டி செல்லும்போது பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்படுவதை தடுக்க பல நடவடிக்கை எடுத்தாலும் தள்ளுமுள்ளு தொடர்கிறது.

 மாற்று யோசனை செய்யப்படும். கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் தேவஸ்தானம் சார்பில் இயங்கும் இலவச பஸ் மட்டுமல்லாமல், அரசு சார்பில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், பாபவிநாசத்திற்கு அதிக பஸ்களை இயக்குவதற்கு போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் எத்தனை பேர் வந்தாலும், ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், மணிக்கணக்கில் காத்திருக்காமல் பக்தர்கள் அனைவரும் 24 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ரூ. 50க்கான டிக்கெட் விற்பனையை ரத்து செய்ய தேவஸ்தானம் ஏற்கனவே முடிவு செய்தது. ஆனால் சில காரணங்களுக்காக அதை ரத்து செய்யாமல் ஒரு நாளைக்கு 2,000 டிக்கெட் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கோடைக்காலத்தில் அதிக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் வரும் 15ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ரூ. 50க்கான டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ள போது சுவாமியின் அருகில் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பக்தர்கள் கேட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும். தேவஸ்தானம் சார்பில் இயங்கிவரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் தினந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகள் தெலுங்கில் ஒளிபரப்பி வருகிறோம். வரும் 14ம் தேதி முதல் தமிழிலிலும் இரவு 7.30 மணிமுதல் 9.30 மணிவரை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சில
  • மீண்டும் நெருக்கடி நிலை கால அச்சம்: ராம்ஜெத்மலானி பேச்சு



  • பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட வழக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு துணை முதல்வர் சுக்பீர் சிங் விடுவிப்பு: பஞ்சாப் கோர்ட் தீர்ப்பு



  • அருணாச்சலம், உத்தரகண்ட் ஆட்சி கவிழ்ப்பு எதிரொலி: மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த காங். முடிவு



  • பதன்கோட் தாக்குதல் விவகாரம்: பாக். செல்ல என்ஐஏ குழு முடிவு



  • அசாமில் 65 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குபதிவு



  • வேட்பாளர்களின் சொத்து கணக்கை ஆராய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடமுடியாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு



  • மே. வங்கத்தில் திரிணாமுல்; கேரளாவில் இடதுசாரிகள் வெற்றிபெறும் அசாமில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது கருத்து கணிப்பில் தகவல்



  • வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரக்கு ரயில்களில் குடிநீர் சப்ளை ரயில்வே அமைச்சகம் முடிவு



  • பீகாரில் மதுவிலக்கு இன்று அமலுக்கு வந்தது



  • கேரளாவில் 124 தொகுதிகளில் இடது முன்னணி வேட்பாளர்கள் அறிவிப்பு: 58 புதுமுகங்கள், 16 பெண்களுக்கு வாய்ப்பு



Facebook

Twitter

உடல் எடையை 90 கிலோவாக்கும் சிம்பு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]