இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சேஷாசல வனப்பகுதியில் 50 சிறுத்தைகள்: பக்தர்கள் அதிர்ச்சி

3/29/2016 2:42:02 PM
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கழுத்தில் தூக்கு கயிறு, கையில் திருஓடு ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை திடீர் பரபரப்பு பெல்ஜியம் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

திருமலை: சேஷாசல வனப்பகுதியில் 50 சிறுத்தைகள் உள்ளதாக தேவஸ்தான வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆந்திர மாநிலத்தில், சேஷாசல வனப்பகுதி கிழக்கே கடப்பா மாவட்ட வனப்பகுதியில் இருந்து மேற்கே சித்தூர் மாவட்டம் தலக்கோனா வரை பரந்துவிரிந்து காணப்படுகிறது. இங்கு சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி நடைபாதையில் நடந்து வந்த காஞ்சனா என்ற சிறுமியை சிறுத்தை தாக்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.எனவே ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திருமலையில் உள்ள மான்பூங்கா அருகே வனத்துறை சார்பில் சிறுத்தைகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு, ஒரு ஆண் சிறுத்தையை பிடித்தனர். 27ம் தேதி மேலும் ஒரு ஆண் சிறுத்தைபிடிக்கப்பட்டு, ராஜம்பேட்டை வனப்பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி இரவு அலிபிரி மலைப்பாதை காளிகோபுரம் அருகே கடை வைத்துள்ள அமர்நாத் என்பவர் தூங்கிக்கொண்டு இருந்தபோது சிறுத்தை தாக்கிவிட்டு சென்றது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்தனர்.தற்போது, ஸ்ரீவெங்கடேஸ்வரா வனவிலங்கு பூங்காவிற்கு உட்பட்ட இடத்தில் 6 சிறுத்தைகள் மற்றும் மாமண்டூர் வனச்சரகத்தில் 10 சிறுத்தைகள் உட்பட மொத்தம் 50 சிறுத்தைகள் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இதுகுறித்து, தேவஸ்தான வன அலுவலர் சிவராம் பிரசாத் கூறுகையில், சிறுத்தைகளுக்கு மனிதர்களை கண்டால் பயம். ஆனால், நாம் அதனைப்பார்த்து பயப்படுகிறோம். சிறுத்தைகள் இரை தேட மட்டுமே வனப்பகுதியில் இருந்து வெளியே வரும். அதற்கு நாய்கள்தான் பிரியமான உணவாகும். சிறுத்தைகள் தங்களை காத்துக்கொள்ளத்தான் மனிதர்களை தாக்குகிறது. இருந்தாலும், மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்றார்.

மேலும் சில
  • கேரளாவில் 124 தொகுதிகளில் இடது முன்னணி வேட்பாளர்கள் அறிவிப்பு: 58 புதுமுகங்கள், 16 பெண்களுக்கு வாய்ப்பு



  • லாட்டரியில் ரூ. 65 லட்சம் அள்ளினார் பிச்சைக்காரர்



  • ஏப்ரல் 15 முதல் ஜூன் 30 வரை ஆதார் இருந்தால்தான் ஏழுமலையான் தரிசனம்



  • வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு



  • நக்சல் தாக்குதலில் 7 வீரர்கள் பலி சோனியா, ராகுல் கண்டனம்



  • இமாச்சலில் லேசான நிலஅதிர்வு



  • பெண் எம்எல்ஏ குறித்து அவதூறு பேச்சு பாஜ எம்எல்ஏவை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை



  • அசாமில் இன்று ராகுல் பிரசாரம்



  • மோட்டார் வாகன காப்பீடு பிரீமியம் உயருகிறது



  • இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்கள்



Facebook

Twitter

விஷாலுடன் ஜோடியா? மடோனா மறுப்பு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]