இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நேர்த்திக்கடன் செலுத்த பால்குடம் சுமந்து வந்த செல்லப்பிராணி தர்மபுரி அருகே விநோதம்

3/24/2016 2:22:36 PM
ஹாட்ரிக் வெற்றியுடன் கம்பீரமாக அரையிறுதியில் வெ.இண்டீஸ் கூடுதலாக 10 ரன் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் தொடரும் தீவிரவாதிகள் அட்டூழியம் ஈராக்கில் தற்கொலை தாக்குதல் 25 பேர் பரிதாப பலி

தர்மபுரி: தர்மபுரி அருகே பங்குனி உத்திரத்தையொட்டி, முருகனுக்கு பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய நாயை பார்த்து பக்தர்கள் வியப்படைந்தனர்.தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கவேல்(40). இவர் மணி என்ற நாயை வளர்த்து வருகிறார். தும்பலஅள்ளி பால்சொசைட்டிக்கு பால் ஊற்ற தினசரி காலை, மாலை நேரங்களில் செல்லும் போது, மணியையும் உடன் அழைத்து செல்வார். அப்போது, படிப்படியாக பயிற்சி அளித்து பால் ஊற்றிய கேனை கொண்டு செல்லவும், பின்னர் கடைகளில் இருந்து காலி கேன்களை திரும்ப கொண்டு வரவும் பழக்கினார். நாளடைவில், பால் ஊற்றி வருவதற்காக மணிக்கு பிரத்யேகமாக சிறிய வண்டியை செய்தார். அந்த வண்டியில் பால் கேனை வைத்தால், சொசைட்டிக்கு சென்று பால் கொடுத்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விடும்.
    
கடந்த நான்கு ஆண்டுக்கு முன், சொசைட்டிக்கு பால் கொண்டு சென்ற மணி மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் அதன் கால் முறிந்தது. கால்நடை மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்த பின்பும், சரிவர நடக்க முடியாமல் மணி அவதிப்பட்டது. இதனையடுத்து, மணி பூரண குணமடைந்தால், தும்பலஅள்ளி பாலமுருகன் கோயிலுக்கு அலகு ஏந்தி பால் குடம் சுமந்து வர செய்வதாக தங்கவேல் வேண்டுதல் வைத்தார். அதன் பிறகு, மணி குணமடைந்து முன்பு போல நடமாடியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்தாண்டு பங்குனி உத்திரம் அன்று பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தியது. நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி, நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மணிக்கு திருநீர், குங்குமம் பூசி, மாலை அணிவித்து அதற்கென செய்யப்பட்ட சிறு வண்டியில் பூட்டினர். பின்னர், மணி அலகு ஏந்தி பால்குடம் சுமந்தபடி ஊரில் இருந்து பாலமுருகன் கோயிலுக்கு பக்தர்களோடு ஊர்வலமாக சுமார் ஒரு கிமீ நடந்து வந்தது. இந்த செல்லப்பிராணியின் நேர்த்திக்கடன் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து விவசாயி தங்கவேல் கூறுகையில், ‘கடந்த 4 ஆண்டுக்கு முன் விபத்தில் மணியின் கால் முறிந்தது. அது குணமடைய பாலமுருகன் கோயிலில் வேண்டுதல் வைத்தேன். அது நிறைவேறியதால் நேர்த்திக்கடன் செலுத்த வைத்துள்ளேன்’ என்றார்.

மேலும் சில
  • வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை



  • கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவின் மறுவாழ்வுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் மாதர் சங்க செயலாளர் சுகந்தி பேட்டி



  • விருப்ப மனு கொடுத்தவர்களில் முனுசாமி கோஷ்டிக்கு அழைப்பு பழனியப்பன் கோஷ்டிக்கு ஆப்பு



  • 4 ஆடிய ஆட்டம் என்ன? பேசிய பேச்சு என்ன? நத்தத்தால் நசுக்கப்பட்ட சாமிக்கு வாய்ப்பு கிடைக்குமா?



  • எம்ஜிஆரை முதலில் கோட்டைக்கு அனுப்பியும் முன்னேறலையே அருப்புக்கோட்டை...



  • வாசனுக்கு குழப்பம் தொண்டர்கள் உறக்கம் எந்த கூட்டணியில் சேருவது?



  • அதிமுக மீதுள்ள வெறுப்பு திமுக அணிக்கு சாதகம் காதர் மொய்தீன் பேட்டி



  • திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் நியமனம்



  • சுற்றுலா வரும் வெளிநாட்டினரை கண்காணிக்க புது சட்டம் நிர்வாகிகளுக்கு பயிற்சி



  • கும்மிடி. டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழா



Facebook

Twitter

காட்டு பங்களாவில் பயந்து அலறிய ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]