வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
3/23/2016 2:02:03 PM
ஆவடி: அம்பத்தூர் ஆசிரியர் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் சுடலை மணி (33). இதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் பலருக்கு கடன் கொடுத்துள்ளார் சுடலை மணி. ஆனால் கடனை திருப்பி கொடுத்தபாடில்லை.இந்நிலையில் இவர் நடத்தி வந்த மளிகை கடையின் வாடகை ஒப்பந்தமும் முடிந்தது. கடையை காலி செய்யும்படி உரிமையாளர் கூறியுள்ளார். இதையடுத்து வேறு இடத்தில் கடை பார்த்தார் சுடலைமணி. கிடைக்கவில்லை. கடன் கொடுத்தவர்களும் திருப்பி கொடுக்கவில்லை, கடையையும் காலி செய்ய சொன்னதால் விரக்தி அடைந்த சுடலை மணி நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இைத பார்த்து அப்பாவும் அவரது தம்பியும் அதிர்ச்சியடைந்து கதறினர்.புகாரின் பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.