ஆவடி அருகே மனைவி மீது கெரசின் ஊற்றி தீ வைப்பு கணவரிடம் விசாரணை
3/23/2016 2:01:07 PM
ஆவடி: ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, தெலுங்கர் காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் ஜான் (33). கூலி தொழிலாளி. இவரது மனைவி அருணா (28). தனியார் கல்லூரி துப்புரவு ஊழியர்.இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு வினோஸ் (9) என்ற மகனும், அனிஷா (7) என்ற மகளும் உள்ளனர்.ஜான் குடிப்பழக்கம் உடையவர். நாள்தோறும் வேலை முடிந்ததும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவி அருணாவிடம் தகராறில் ஈடுபட்டு, அடித்து உதைப்பது வழக்கம்.
இந்நிலையில், ஜான் நேற்று மாலை மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அருணாவிடம் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே ஜான் வீட்டைவிட்டு வெளியேறி, மீண்டும் அதிகளவில் குடித்துவிட்டு, இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பினார்.பின்னர் அருணாவை ஜான் அடித்து உதைத்துள்ளார். வீட்டில் இருந்த கெரசினை அருணா மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் அருணா உடல் கருகி அலறி துடித்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இப்புகாரின்பேரில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜானைப் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் முத்தாபுதுப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.