ரிச்சாவை கண்டுகொள்ளாத கோலிவுட்
3/22/2016 2:19:18 PM
‘மயக்கம் என்ன?’ படத்தில் தனுஷ், ‘ஒஸ்தி’ படத்தில் சிம்பு என ஒரே நேரத்தில் 2 போட்டி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் ரிச்சா கங்காபாத்யா. படப்பிடிப்பின்போது பரபரப்பாக பேசப்பட்டார். முதல்நாள் தனுஷ் படப்பிடிப்பில் பங்கேற்றால் மறுநாள் சிம்பு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். இருவருடன் ஒரே சமயத்தில் நடிப்பதுபற்றி ரிச்சாவிடம் அப்போது கேட்டபோது, சாமர்த்தியமாக பதில் அளித்து வம்பில் சிக்காமல் நழுவினார். கிளாமர் காட்சிகளிலும் அப்படங்களில் ஜமாய்த்திருந்தார் ரிச்சா. தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிச்சாவுக்கு 2 படங்கள் தவிர புதிய தமிழ் படம் எதிலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. இதனால் காரணம் புரியாமல் திணறிக்கொண்டிருந்தார்.
‘நீங்கள் குண்டாக இருப்பதால்தான் புதியபட வாய்ப்பு வரவில்லை’ என்று சிலர் கூற உடற்பயிற்சி செய்து வெயிட் குறைத்தார். ஆனாலும் யாரும் வாய்ப்பு தரவில்லை. வங்காள மொழிப்படம், தெலுங்கு என ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்தார். இதற்கிடையில் பாய்பிரண்டுடன் காதல் என்று வம்பிலும் சிக்கினார். கோலிவுட்டில் காணாமல்போன ரிச்சாவுக்கு நேற்று பிறந்த தினம். அவரது ஹீரோக்கள் தனுஷ், சிம்பு யாராவது வாழ்த்து சொன்னார்களா என்று விசாரித்தபோது யாரும் வாழ்த்து சொன்னதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. தமிழில் நல்லதொரு இடத்தை பிடிப்போம் என்ற எதிர்பார்ப்புடன் வந்த ரிச்சா ஏமாற்றத்துடன் இருக்கிறாராம்.