இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பட்டியலையே அறிவிக்கவில்லை பந்தலை போட்டார் முக்கோண அமைச்சர் உதயா.. இது சரியா...?

3/19/2016 12:35:19 PM
தி.க. சமூக நீதி மாநாட்டு தீர்மானங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றுவோம் : திருச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு காஞ்சிபுரம் அருகே பரிதாபம்பைக் மீது லாரி மோதி தம்பதி பலி : டிரைவர் கைது

சாத்தூர்: தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சி மீது அதிருப்தி அலை வீசுவதால் சிட்டிங் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு சீட் கிடைப்பது அரிதினும் அரிது என்ற சூழ்நிலை அதிமுகவில் நிலவுகிறது. இந்நிலையில், ‘முக்கோண அமைச்சர்’ பந்தலை போட்டு தேர்தல் பணியே ஜரூராக தொடங்கி விட்டார். உதயா.. இது சரியா... என அதிமுகவினர் அங்கலாய்க்கின்றனர்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி எம்எல்ஏ உதயகுமார். வருவாய் அமைச்சராகவும் உள்ளார். சீட்டுக்கு பணம் பெற்ற விவகாரம், அமைச்சர்களின் முறைகேடான சொத்துக்குவிப்பு குறித்து ரகசிய விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது தொகுதியில் பந்தலை போட்டு தேர்தல் பணியை உதயகுமார் தொடங்கி இருப்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து, மதுரையில் தொழில் நடத்தியவர் உதயகுமார். தனக்கு சம்பந்தமே இல்லாத விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று அமைச்சரானார். இதனால் உள்ளூர் அதிமுக பிரமுகர்கள் பலர் இவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர். ‘முக்கோண அமைச்சர்’ என்று கிண்டலாகவும் பேசத்தொடங்கினர்.உதயகுமார் சாத்தூர், கே.கே.நகரில் உள்ள தனது வீட்டருகே ஒரு காலிமனையை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த இடத்தில் தேர்தல் விதிகளை மீறி ஜெயலலிதா படத்துடன் பிரமாண்ட போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதிமுக தேர்தல் அலுவலகம் போலவும் இதை பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.இதை கவனித்த அதிருப்தி அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அவர்களோ, ‘சொந்த இடத்தில் அலுவலகம் அமைப்பதில் தவறில்லை’ என கூறி உள்ளனர். பட்டியலே அறிவிக்காத நிலையில் பந்தல் போட்ட விவகாரம் குறித்து தலைமைக்கும் புகார் மனு அனுப்பி உள்ளனர்.

மேலும் சில
  • 8,000 கிலோ உப்பில் கலாம் ஓவியம் மாணவர்கள் அசத்தல்



  • தமிழகத்தில் கொளுத்துது வெயில் பரவுது அம்மை.. ஜாக்கிரதை



  • இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்ககோரி மீன்வளத்துறை ஆபீசை மீனவர்கள் முற்றுகை



  • நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்ட சங்கரின் மனைவி படிப்புக்கு இன்சூரன்ஸ் சங்கம் உதவி



  • சோதனை தீரவில்லை.. சொல்லி அழ யாருமில்லை ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ் மனமுருகி வழிபாடு பன்னீரை சட்டை செய்யாத தங்கம் ஆதரவாளர்கள்



  • மாவட்ட செயலாளர், எம்எல்ஏ சீட் ரெண்டில் ஒண்ணாவது கிடைக்குமா? அதிமுக மாஜிக்கள் ஏக்கம்



  • தேர்தல் சீட்டுக்காக ஜெ. பிறந்த நாள் விழாவை ஆடம்பரமாக நடத்தினோம் எல்லாம் போச்சு; அதிமுகவினர் புலம்பல்



  • தேர்தல் நடத்தை விதியை மீறி தார் சாலை அமைக்கும் பணி



  • மேடவாக்கம் நியூபிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா



  • புழல் பகுதியில் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் ஆலோசனை எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு



Facebook

Twitter

தமிழுக்கு வரும் மற்றொரு டோலிவுட் ஹீரோ
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]