இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உட்கட்சி மோதல் வெடிக்கிறது அதிமுக முழுமையாக அழிவை சந்திக்கும் வைகோ பேட்டி

3/18/2016 3:01:22 PM
ஆளுனர் உரை மீது சட்டசபையில் நாளை விவாதம் மருத்துவ மாணவர் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: இன்ஜினியரிங் படிப்புக்கு ரேண்டம் எண்ணும் வெளியாகிறது

கோவை: உட்கட்சி மோதல் வெடிக்கிறது, அதிமுக முழுமையாக அழிவை சந்திக்கும் என வைகோ கூறினார்.கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள கோவை மாவட்ட மதிமுக அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில், பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை வந்தார். அப்ேபாது அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பகல் கொள்ளை நடந்துள்ளது. இதுபோல் வேறு எந்த மாநிலத்திலும் ஊழல் நடந்ததில்லை என மத்திய பொருளாதார ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் மதுவால் பெண்கள் சமுதாயத்தை அதிமுக அழிக்கிறது. அதிமுகவுக்குள் பெரும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. கொள்ளையடித்த பணம் முறையாக வந்து சேரவில்லையா? அல்லது சிலர் அமுக்கி விட்டார்களா? என தெரியவில்லை.

 கொள்ளை பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல் நடந்துவருகிறது. ஐவர் அணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் கழற்றி விடப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் கேரளாவில் பிடிபட்ட கோடிக்கணக்கான ஹவாலா பணம்கூட போயஸ் கார்டனுக்குத்தான் சென்றுள்ளது. 2 அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடந்துவருகிறது. அதிமுகவுக்குள் நடப்பது உட்கட்சி பிரச்னை என மவுனமாக இருக்க முடியாது. மக்கள் பணம், அந்த கூடாரத்தில் உள்ளது. அதை மீட்க வேண்டும். இந்த தேர்தலில் அதிமுக முழுமையாக அழிவை சந்திக்கும். ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கில், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு சரியானது என மிக விரைவில் உச்சநீதிமன்றத்தில் உறுதிசெய்யப்படும்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாவட்ட வாரியாக அதிமுக ஏற்கனவே பணம் பட்டுவாடா செய்துவிட்டது. இந்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கவிடாமல் தேர்தல் ஆணையம் தடுக்கவேண்டும். அதிமுகவின் பணம் பட்டுவாடாவை, இளைஞர் சமுதாய ஓட்டு முறியடிக்கும்.மக்கள் நலக்கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து வரும் 20ம்தேதி சென்னையில் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளோம். மிக சுலபமாக தொகுதி பங்கீடு செய்வோம். இரண்டு அல்லது நான்கு நாளில் தொகுதி பங்கீடு முடிவடையும். தேர்தல் ஆணையம் ரொம்பவே கெடுபிடி செய்கிறது. தேர்தல் ஆணையம் தனது போக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில், சாதிய வெறி படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.இவ்வாறு வைகோ கூறினார்.

மேலும் சில
  • ஆளுனர் உரை மீது சட்டசபையில் நாளை விவாதம்



  • மருத்துவ மாணவர் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: இன்ஜினியரிங் படிப்புக்கு ரேண்டம் எண்ணும் வெளியாகிறது



  • பைக், லாரி நேருக்கு நேர் மோதல்: 2 மாணவர் உள்பட 4 பேர் பலி



  • நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்



  • கோயில் கருவறையில் புகுந்த நாகபாம்பு பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு



  • கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோனில் பயங்கர தீ 3 மணி நேரம் தொடர் வெடிச்சத்தம் கடை உரிமையாளர் கைது



  • 6 டன் எடை கொண்ட ஆரோக்கிய அன்னை கெபி இடமாற்றம்



  • 21 குண்டுகள் முழங்க ஐபிஎஸ் அதிகாரி உடல் அடக்கம்



  • யோகா தினத்தை முன்னிட்டு பொன்னேரி பள்ளி மாணவர்கள் பேரணி



  • மாடம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 5 லட்சத்தில் புதிய மின் டிரான்ஸ்பார்மர்



Facebook

Twitter

Madonna will kattippitikka hero Condition
ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]