இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

செம்பரம்பாக்கம் அருகே நடந்த ஏரி மணல் கொள்ளை வழக்கில் அமைச்சர் மீது நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்டில் பரபரப்பு விசாரணை

3/18/2016 2:58:26 PM
ஆளுனர் உரை மீது சட்டசபையில் நாளை விவாதம் மருத்துவ மாணவர் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: இன்ஜினியரிங் படிப்புக்கு ரேண்டம் எண்ணும் வெளியாகிறது

சென்னை: ஏரி மணல் கொள்ளை வழக்கில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. சென்னையை சேர்ந்த துரை ஆனந்த், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:செம்பரம்பாக்கம் அருகே நேமம் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஆழப்படுத்த அதிகமாக சவ்வூடு மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது. ஏரியை 251 அடி கொள்ளளவாக அதிகரிக்க மணல் எடுக்கும்படி அரசு அனுமதி வழங்கியது. 10 ஆயிரம் லோடு மணல் எடுக்க அனுமதி வாங்கிவிட்டு சட்ட விரோதமாக 1 லட்சம் லோடு மணல் அள்ளியுள்ளனர். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.இதனால் அந்த ஏரி பலவீனம் அடைந்ததுடன், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஏரி உடைந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குள் தண்ணீர் புகுந்தது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு மூலம் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இந்த மணல் கொள்ளை தான் காரணம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.சுரேஷ்சாமி, ‘மணல் கொள்ளை நடந்துள்ளது. கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தினால் தான் நியாயம் கிடைக்கும்’ என்றார். இதை கேட்ட நீதிபதிகள், செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏற்கனவே ஒரு வழக்கை விசாரித்து வருகிறோம். ஏப்ரல் மாதம் 17ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது அந்த வழக்குடன் சேர்த்து உங்கள் வழக்கையும் விசாரிக்கிறோம் என்றனர்.

மேலும் சில
  • ஆளுனர் உரை மீது சட்டசபையில் நாளை விவாதம்



  • மருத்துவ மாணவர் கவுன்சலிங் நாளை தொடங்குகிறது: இன்ஜினியரிங் படிப்புக்கு ரேண்டம் எண்ணும் வெளியாகிறது



  • பைக், லாரி நேருக்கு நேர் மோதல்: 2 மாணவர் உள்பட 4 பேர் பலி



  • நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்



  • கோயில் கருவறையில் புகுந்த நாகபாம்பு பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு



  • கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோனில் பயங்கர தீ 3 மணி நேரம் தொடர் வெடிச்சத்தம் கடை உரிமையாளர் கைது



  • 6 டன் எடை கொண்ட ஆரோக்கிய அன்னை கெபி இடமாற்றம்



  • 21 குண்டுகள் முழங்க ஐபிஎஸ் அதிகாரி உடல் அடக்கம்



  • யோகா தினத்தை முன்னிட்டு பொன்னேரி பள்ளி மாணவர்கள் பேரணி



  • மாடம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 5 லட்சத்தில் புதிய மின் டிரான்ஸ்பார்மர்



Facebook

Twitter

Madonna will kattippitikka hero Condition
ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]